FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AgNi on September 03, 2024, 12:27:30 PM
-
நீ யாரோ நான் யாரோ ஆனப்பின்
என்ன பந்தம் இருக்க போகிறது!
நமக்குள் பேச்சுவார்த்தை என்பது
நாடக நல விசாரிப்புகளே !
கடந்த கால கனவுகண்ணாடிகளில்
இன்றைய நிஜங்கள் பதிந்திருக்க நியாயமில்லை !
நமது நேற்றும் இன்றும் வாழ்தலின்
உதிரியாக சிதறி கிடக்கின்றன !
இந்த இருளுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம் ?
காலக்கனலின் சூட்டிலிருந்து தப்பித்து
விடியல் வானம் ஏங்குகிறேன் !
வெறிச்சோடி கிடக்கும் நினைவுச் சோலைக்குள்
தூரத்து கானல்நீராய் நீ !
உன் நினைவுகளின்று என்னை பிரித்தெடுக்க
இன்னும் எத்தனை யுகங்கள்
காத்திருக்க வேண்டுமோ?
-
Migavum aartham ulle Kavithai AgNi sis. ❤️❤️❤️
உன் நினைவுகளின்று என்னை பிரித்தெடுக்க
இன்னும் எத்தனை யுகங்கள்
காத்திருக்க வேண்டுமோ?
Unga Kavithaiyil enakku migavum piditha kelvi.
Bathil illa oru kelvi.