FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:47:53 PM
-
தேடிக்கிடைக்காத ஒன்று
தேடாமல் கரம் சேர
வாடிக்கிடந்த பயிர்
மழை கண்ட நொடி போல
நானும் மகிழ்வுடனே
என் நாட்களெல்லாம் கடத்திவிட
ஓர் நாளில் கனவு கண்டேன் அக்கனவினிலே அவள் கண்டேன்
எல்லாம் எனக்காய் தான்
என் இறைவன் படைத்தானோ
என்றே என்னுள்ளும்
எழுந்த ஒரு கேள்வி
விடையது கிடைக்கும் முன்
வீணாகி போனது போல்
என்னை நீங்கித்தான்
எங்கே நீ சென்றாயோ
ஓயாது வாய் பேச
உளமதுவும் தான் கூச
ஓடிய நாட்களையே
நினைத்து நான் ஏங்குகிறேன் அந்நாளும் மீண்டும்
வாராதோ என்றெண்ணி
இப்போதும் நானே
அங்கேயே தேங்குகிறேன்
பிறை தேடும் நேரம்
இருட்டுக்கு இரையாகும் பூமியாய்
என் நிலை போகாதிருக்க
எப்போதும் நீ வேண்டும்