FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:43:48 PM
-
கரடுமுரடான நிலா
கண்ணுக்கு அழகென தெரிய
காரணம் என்னவென்று
கன நேரம் யோசிக்க
தூரமே காரணமாய்
என் நெஞ்சில் தோன்றிவிட
எனை விட்டு நெடுந்தூரம்
நீ நீங்கி சென்றாலும்
என்னுள்ளே புதைந்து விட்ட
உன் நினவும் அழகாகும்
என்னும் உண்மையுமே
எனக்கிங்கே புறிந்ததுவே