FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:35:08 PM
-
திரைப்படம் காண்கையிலே
இடைவேளை என ஒன்று
இருப்பது ஏன் என்று
அறிந்தவர் பலருண்டு
இருப்பினும் காரணத்தை
இவ்விடம் சொல்வதுவோ
இக்கதை புரிந்திட ஓர்
காரணி அது என்று
சில மணி நேரங்கள்
திரைப்படம் ஓடுகையில்
ஒரு வித அலுப்பதுவே
நமக்கும் தோன்றி விடும்
அஃதினை கலைந்திடவே
மருந்தென தான் நமக்கு
இடைவெளி கொடுப்பதுவும்
சிறந்த மருத்துவமே
இவ்விடம் பெண் ஒருத்தி
என் கவி கண்ட பின்னே
கொஞ்சமும் நெருங்கி வந்து
பழகியே சிலிர்க்க வைத்தாள்
திரைப்படம் போல ஒரு
அலுப்பது வந்ததுவோ
என்றே எண்ணி அவள்
இடைவெளி தந்துவிட்டாள்