ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 350
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
[/color][/b]
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F350.jpg&hash=1c1f39d60b52d4f9641bbd5ba96d6b19be424a92)
நிழற்படத்தில் விரிசல் விட்ட மனதை
பலரும் விமர்சிக்க
என் எண்ண நினைவலைகள் ஏனோ
விரிசலிலும் இணைய துடிக்கும்
இரு மனங்களை எண்ணியே
இப்பதிவை கிறுக்கிய வண்ணமாய்..
நீ என்ற ஓரெழுத்து
நாம் என்ற ஈரெழுத்தாய் மாறிட
நீ மூன்று முடிச்சிட்டு
நான்கு வேதங்கள் சாட்சியாய்
ஐந்தெழுத்து திருமணத்தில்
தொடங்கியது இந்த இல்லற உறவு..
அறுசுவையும் நிறைந்த
நம் திருமண வாழ்வு
ஏழேழுஜென்மமும் இவ்வாறே தொடர்ந்திட
எட்டு திசையிலிருந்தும்
நவதுர்கைகள் வாழ்த்திட
பத்து மாதத்தில் தாய் தகப்பனாய்
நாம் உலாவரவே..
இந்த சின்ன சின்ன விரிசல்களும்
செல்ல சண்டைகளும்
பேசாத நாட்களும்
பேசிய வார்த்தைகளும்
சொல்லாத மௌனமும்
சொல்லிட முடியாத வலியும்
நமக்காக நம் இரு இதயம் இணைந்து
உயிர்பெற்ற அந்த சிறு இதயத்தின்
கரம் பிடித்த கணமே மறந்து மறைகையில்..
நீ நான் என்ற அகம்பாவம் துறந்து
நாம் என்று இன்றும் இனி என்றென்றும்
ஒன்றாய் இணைந்து இம்மனம் துடிக்கட்டும்.
~தமிழ் பிரியை மைனா~