FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 27, 2024, 03:38:30 PM
-
நிலம் நீங்கி நீர் தாங்கி மேகமும்
செல்ல
ஊற்றாகி மலைமுகடில் நீரருவி
துள்ள
மரக்கிளையின் குடில்தனியிலே பறவைகளும்
கொஞ்ச
பனித்துளியும் இலைதனிலே பகலவனை
கெஞ்ச
புற்களிலே பூச்சிகளும் நடனங்கள் ஆட
குளிர் காற்று என் மேனி புகுந்தெங்கோ
ஓட
இவையாவும் என் கண்ணில் நான் கண்ட
காட்சி
இம்மண்ணில் என்றென்றும் இயற்கையின்
ஆட்சி