FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 23, 2024, 11:02:26 PM

Title: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Forum on July 23, 2024, 11:02:26 PM
நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் பதிமூன்றாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் ..

எதிர்வரும் ஜூலை 28 ஆம்  தேதிக்கு  முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் பதிமூன்றாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.
 
Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Sun FloweR on July 24, 2024, 01:09:55 AM
மழைச்சாரலில் நனையும் இன்பம் வேண்டுமா?
ஓடும் நதியில் மூழ்கும் சுகம் வேண்டுமா?

தாயின் அரவணைப்பு வேண்டுமா?
தந்தையின் கண்டிப்பு வேண்டுமா?

பெண்களைப் போற்றும் பெருமை வேண்டுமா?
ஆண்களை உயர்த்தும் மாண்புமை வேண்டுமா?

அரட்டை அடித்து, அரட்டை அடித்து குறட்டை விட வேண்டுமா?
விடிய விடிய நகைத்தே நரம்பு புடைத்திட வேண்டுமா?

இசையால் விருந்து படைத்திட வேண்டுமா?
இசைக்கே விருந்தாகி விட வேண்டுமா?

நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?
பிறருக்கு அறிவை புகுத்தி விட வேண்டுமா?

இவை அனைத்திற்கும்
ஒரே தீர்ப்பு..
மறுக்க முடியாத
ஒற்றை தீர்வு....
அது நம் நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கம் தான்..

பதின்ம வயதில் அடி எடுத்து வைக்கும் வாழைக் குமரி இவள், நம் அனைவர் வாழ்வில் வந்தது வரம்..
எனக்கும் அந்த வரம் கிடைத்தது ...
ஓர் நாள்,
நண்பர்கள் அரட்டை அரங்கத்தின் வாசல் வந்து நின்றேன்..
அன்றோடு தொலைந்து போயின எனது துயரங்களும், சோகங்களும்..

வண்ண வண்ண நிறங்களைச் சுமந்த நண்பர்கள் வானவில்லாய் மாறிப்போயினர் என் வாழ்வில்..

இணையதள வானொலியின் பாடல்கள் புது வெளிச்சத்தை புகுத்தி விட்டு போயின என் மனதில்..

தொலைந்து போன உறவுகள் தொடர்ந்து இன்றும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன தோழியாய், சகோதரியாய், நண்பனாய்...

மன்றத்தின் (forum) பக்கத்தில் என் விழிகளை வைத்தது,
குன்றத்தின் மேல் என் கால்களை வைத்தேன் என்பதே மெய்மை..

அரட்டை அடிப்பதின் அரிச்சுவடு தெரியாமல் வந்தாலும் கூட ஆசுவாசப்படுத்திக் கொள்ளுமளவு ஆற்றலைத் தந்தது என்பதே நிதர்சனம்

ஒரு மாபெரும் சாம்ராஜ்யம்
ஒற்றை ஆளுமையின் கையில் பொற்காலமாய் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது
இணைய வெளியில் ..
நம் மன வெளியில்....
Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: BlueSea on July 25, 2024, 09:30:19 PM

(https://i.ibb.co/WFm3fvF/forum12.png) (https://ibb.co/WFm3fvF)


அறிவாற்றலின் பொக்கிஷ பெட்டி:
                 
எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடலானான்... அவனையும் அவன் தொலைத்த சிறு சிறு சந்தோஷங்களையும்....

கடந்து வந்த பாதைகள் யாவும் வலிகளையும் துயர்களையும் நினைவூட்டினாலும், அந்நினைவுகளை மறக்கும் ஓர் சாதனம் எங்கும் தென்பாடாதா என்றே ஏங்களானான்....

நிஜ வாழ்வில் கை கொடுக்க, தோள் தாங்க ஓர் உறவு இல்லையென்றாலும் அவ்வுறவை மெய்நிகர் அரட்டையிலாவது கிடைத்து விடாதா எனும் ஆதங்கத்தில் அவ்விடம் நாடியே தனது தேடுதலில் பயணித்தான்....

இவ்வாறு, பயணிக்கையில் ஓர் நாள் அவன் கண்களில் தென்பாட்டது இளவேனில் பொழிதில்
நமது "நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கம்" எனும் ஒரு அற்புதமான செயலி....

இதுவரை, அவன் தன் வாழ்வில் கண்டுடிடாத ஓர் பேரின்பம் அடையலானான்....❤❤❤
தேடி கிடைத்தாலும் சேரா பொக்கிஷமாய் அவனுக்கு அது அமையப்பெற்றது. மெய்நிகர் நட்புகளே அவன்தம் உறவாக மாறி அவனின் சந்தோச சாரல்களுக்கு வித்தானார்கள்....

நாட்கள்,  கழிய கழிய அவனுக்குள் ஓர் புத்த்துணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது. அப்படி, ஓர் நாளில் அவனுக்கு அறிமுகமானதே நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்தின் பொது மன்றம் எனும்
 ஞானத்தின் பொக்கிஷ பெட்டி....

அந்த, பொக்கிஷ பெட்டியில் அப்படி என்னதான் சிறப்புக்கள் என்று பார்த்தால் அவனின் மனதில் நினைத்ததை விட தலைசார் பக்கங்களை பார்த்து வியக்கலானான்....

அவனை, பற்றிய முன்னுரை கொடுத்து நகர்கயில் அப்பக்கங்களை புரட்டி பார்த்து தன்னையும் மறந்து அந்த பொது மன்றத்தில் மூழ்களானான். ஒவ்வொரும், அவர்தம் கவி புலமைகளை ஆவலுடன் இயற்றும் பக்கமும், இடைவிடா இசையை தான் மட்டும் அனுபவிக்காமல் அவன்தம் நட்பென்னும் மெய்நிகர் உறவுகளோடு இன்பமாய் பகிர அதற்கென தனி பக்கங்களும், தனக்குள் இருக்கும் இதுவரை வெளி உலகத்திற்கு காண்பிக்க முடியா உள்ள தம் மெய்யறிவை வெளி கொனர் வரும் சாதனத்தில் இன்பமாய் பயணிக்கலானான்....

ஓர் மறுக்கபடாத உண்மை உணர்ந்தான் இதன் பயன்பாட்டில்.... 🤔🤔 அவனை, போல் இங்கு ஏராளமான பயன்பாட்டாளார்கள் அவர்தம் மனதில் உள்ள ஞானத்தை பூட்டியே வைத்து தவித்த மனங்களுக்கு ஒரு ஆறுதல் மட்டும் வழங்காமல் அரவணைப்பும் கொடுத்து அன்பை வாறி வழங்கும் பொக்கிஷ பெட்டியாகவே இருந்து அனைவரின், அளவில்லா சந்தோஷங்களுக்கு உறைவிடமாய் அமைந்த இத்தளத்திற்கு 13 ஆம் வயதை எடுத்து வைக்கும் இத்தளம் நட்புகளோடு வாசம் மிகும் மலர்களால் ஆன பூச்செண்டுகளை இவ்வாண்டு விழாவில் நமது பாக்களாலும் அன்பால் ஆன நட்பெனும் ஸ்வாரஸ்யத்தையும் கலந்து வரவேற்போம்.... வாருங்கள்....!!!!

இம்மெய் நிகர் பொது மன்றமும், நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கமும் நம்மோடு வளரட்டும்.... இடைவிடா அன்பை பொழியட்டும்...

இத்தளத்தில்,
கூடும் நட்புகளே நம்முடனான உறவில் காமமும் இல்லை, காதலும் இல்லை இவ்வுறவிற்கு இவ்வுலகில்  இன்னும் பெயர் வைக்க படவும் இல்லை...!!!

Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Mr.BeaN on July 26, 2024, 02:25:45 PM
நட்பெனும் உறவும் நம்மிடம் வரவே
நல்துனையாக இத்தளம் கண்டேன்
கற்பனை சிறகை நீட்டியும் பறக்க
வானுமுமிதுவே என்று நான் பறந்தேன்
நண்பர்கள் கோடி நயமுடன் கூடி
சிந்தனை வளர்க்கும் சங்கதி பேசி
இங்கிதம் யாவும் நமக்குள் விதைத்து
சங்கீதம் கூட நமக்காய் இசைத்து
பொங்கிடும் இன்பம் என்றும் அளித்து
சங்கடம் சற்றே மெல்லமாய் அழித்து
கல் மனம் இன்று மெல்ல கரைத்து
கனிவுடன் என்னை பேச பணித்து
சொற்களின் சுவையை அள்ளி தெளித்து
பேசிடும் மாந்தர் தண்ணில் நுழைத்து
என்னையும் ஆளாய் ஆக்கி மகிழ்ந்த
நண்பர்கள் தமிழ் அரட்டை தளத்தை
இன்றுநான் தமிழில் வாழ்த்திட வந்தேன்
என்றுமே நீயும் வாழியவே
Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: mandakasayam on July 26, 2024, 05:05:34 PM
    நாள்தோறும் நம்முடன் தொடரும் பந்தமே!!   தினசரி உன்னுடன் இணைய தவறியதே இல்லை .. நண்பர்களின் நட்பை சொல்ல வார்த்தைகள் ஏது?   

 பல நட்பினை ஒன்று சேர்த்து மாபெரும் படைப்பாய் நிலைத்து நிற்கிறாய்!! எண்ணிலடங்கா உறவுகள்  ஏற்ற தாழ்வற்ற ஒற்றுமைகள் சமமாக கடைபிடிக்கப்பபடும்  நியதி,!!!

இணைய நட்பு தானே என நினைத்து பார்க்க முடியுமா, ஒவ்வொரு நாண்பர்களிடத்தில் அத்துனை பிரியம்,  .பாகுபாடு அல்லாத பண்புகள் சில முரண்பாடுகள் வந்தாலும் காலப்போக்கில் மறதியே மறு ஆக்கம் செய்யப்படுகிறது!!

  நமது நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்திற்கு முதுகெலும்பு பொது மன்றம் தான் ...
   
திறமைசாலிகளின் அடிச்சுவடு பல சிந்தனைகளை தூண்டவைப்பதும் நீயே! பல படைப்பாளிகளை உருவாக்கும் ஓர் அற்புதம் உன்னில் தான். 
 
முடியாதென நினைப்பவர்கள் கூட முயல வைக்கும் உனது தொகுப்புகளும் கோப்புகளும் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் போல் அருவியாய் காட்சியளிக்கிறது!!!!

பதிமூன்று ஆண்டுகளில் பல இதயங்களை கவர்ந்த நாயகனே உன்னுடன் நானும் ஒருவன் என்பதில் பெரும் இன்பமே எனக்கு!!

ஆண்டு விழாவின் அரசனே
மேலும் பல சாதனைகளை தொடர இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

!!நண்பர்களால் நண்பர்களுக்காக!!



Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Kavii on July 26, 2024, 08:25:14 PM
நண்பர்கள் அரட்டை அரங்கம் !

இது தமிழர்களின் அன்பின் திண்ணை!

மனதில் நிறைந்த மகிழ்ச்சியுடன் பதிமூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறாய்! உமக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

உலகின் எல்லா எல்லையிலிருந்தும் தமிழர்கள் உன்னிடத்தில் கூடுகின்றனர்!
அன்பும் அழகும் கலந்த நண்பர்கள் அனைவரும் ஓருயிராய் உன் அரங்கத்தில் நின்று அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்!

தனிமையின் கொடுமையைக் கொல்லும் உன்னத நண்பன் நீ!

சிரிப்பை மறந்தவர்களைக் கூட சிரிக்கை வைக்கும் அற்புத அழகன் நீ!

முகம் தெரிந்தவர் கூட பேசத் தயங்கும் காலத்தில் முகமறியா நண்பர்களை ஒன்றிணைத்து ஓரு பூந்தோட்டத்தை உருவாக்கிய உத்தமன் நீ!

இணையம் என்ற சொல்லின் பயத்தைப் போக்கி நண்பர்களின் இதயங்;கள் இணையும் பூங்காவனம் ஆக்கினாய் நீ!

இங்கு நண்பர்கள் யாராவது சாப்பிட்டாயா. நலமா என்று கேட்டாலெ ஏதோ கடவுளே நெரெ வந்து கேட்டது போல் மனம் குளிர்ந்து குதூகலிக்கும் தனிமையில் வாடும் நண்பர்களை உறவுகளைப் போல் உணர வைத்தவன் நீ!

பேருந்து பயணத்திலும். ரயில் பயணத்திலும் உன்னுடனே பயணம் செய்து அந்த பயணத்தை தினம் தினம் உல்லாச பயணம் ஆக்குபவன் நீ!

உறவுகளைத் தொலைத்தவர்களும். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருப்பவர்களும். அந்த உறவுகளை இங்கே காண்கின்றனர் சகோதரனாய், சகோதரியாய், நண்பனாய்,. நண்பியாய், சமயத்தில் அன்பை வெளிப்படுத்தும்போது அன்னையாய், தந்தையாய் கூட!

நலனில் அக்கறைக் கோண்டு சேல்லமாய் கண்டிக்கும் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என அத்தனை உறவுகளையும் காணலாம் உன்னிடத்தில்!

இத்தனை பெருமைகளைக் கொண்ட கோச்சடையான் நீ!

வெறும் பேச்சோடு மட்டுமல்லாமல். நண்பர்களின் அற்புதமான ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமைகளை அவர்களையும் நண்பர்களையும் உணரச்செய்து மகிழ்விக்கும் அற்புத படைப்பாளன் நீ!

உன் இசைத்தென்றல் நிகழ்ச்சி இசைவிருந்து கொடுத்து இன்பம் தந்திடும்!

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைப் பிரியர்களின் மனதைக் கொள்ளையடித்துச் செல்லும் அதன் வர்ணணையாளரின் குரல் வெளிப்பாட்டில்!

நேயர்களின் விருப்பப் பாடல்களும், வானொலிப் பாடல்களும் எந்நேரமும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்!

வர்ணணையாளர்களின் வார்த்தை குரல்களும். பேச்சு நடையும். வாசிக்கும் அழகும் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு மேலும் மெருகூட்டும் !

உனது அரங்கத்தின் பொது மன்றம் (Forum) பக்கம் ஒன்று போதும் உனது பெருமையப் போற்ற!
இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரனனான நண்பர்கள் அரட்டை அரங்கம் என்னும் நண்பனே! என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தோழனே!

பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

நீ மென்மேலும் வளர்ந்து எண்ணற்ற நண்பர்களை ஒன்றிணைத்து அவர்களின் உள்ளங்கவர் கள்வனாய்! என்றும் மார்க்கண்டேயனாய்! இதே உற்சாகத்தினோடும். அன்போடும். கலைஞர்களின் வர்ணஜாலங்களின் ஜொலிப்போடும். ஒற்றுமையோடும் பயணம் செய்ய எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்!!

வாழ்க பல்லாண்டு!! வளர்க நின்புகழ் மென்மேலும்!!   


Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Unique Heart on July 27, 2024, 02:28:01 AM
நாள் ஒன்றில் "நட்பு" கொண்டோம்!
நட்பில் நல்லதொரு "பாசம்" கண்டோம்!!

கண்கள் காணாதிருப்பினும் காத்து கிடந்தோம்!
கள்ளத்தனமாய் "காதல்" கொண்டோம் 😉!!

அறியாதிருப்பினும் ஆர்வம் கொண்டோம்!
பல உறவுகள் நட்பில் நகைத்து போனோம்!!

"உறவுகள்" என்றும் உயர்வானதே!
அதை உள்ளத்தினால் உறுதிகொள்வது சிறப்பானதே!!

உறவுகள் என்பவை அழியாததே!

(உறவுகள்)அதை ஒன்றிணைத்த   ❤️FTC❤️
உயர்வானதே ❤️..

உறவுகளே!!

தொலைவில் இருப்பினும், தொடர்பில் இருப்பவன் நேசகன்.

ஆகவே நீங்கள் தொலைவில் இருப்பினும், என்றும் தொடர்புலேயே இருங்கள் ❤️❤️❤️.


இப்படிக்கு.

என்றும் என் உறவுகளை மறவா நேசகன்.
MN. AHAMED AARON........


Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: VenMaThI on July 28, 2024, 04:16:59 PM


நட்பு மட்டுமே சூழ்ந்த உலகம்
நட்பால் மட்டுமே வாழும் தருணம்
எண்ணத்தில் நிறைந்து நம்மை நட்பால்
மயக்கிய ஓர் மாய உலகம்..

முகமறியா நட்பில் கூட - பலரின்
மனமறியும் ஓரிடம்
முகவரியாய் இருப்பது இங்கே
இவர்களின் பெயர் மட்டுமே..

ஜாதி மதம் தேவை இல்லை இங்கு
ஜனங்களின் முகமும் நாம் பார்த்ததில்லை..
இணையத்தால் இணைந்த இதயங்கள் இன்பமாய்  பொழுதை கழிக்கும் ஓர் இடம்....

கனமான மனத்தை இலகுவாக்கும் கானங்கள்
கண்ணீரைத் துடைக்கும் அன்பான நட்புகள்
ஜனங்களின் வார்த்தை மட்டுமே இங்கு
பல வலிகளை தீர்க்கும் மருந்தாய் .
தேடித்திரிந்த உறவுகள் இங்கே
நமக்கே நமக்காய் ..

 .. இங்கு
காணாத காதலும் இல்லை
கிடைக்காத நட்பும் இல்லை
கேளாத கிசுகிசுகளும் இல்லை
துடைக்காத கண்ணீரும் இல்லை..

அறிவை வளர்க்கும் பொக்கிஷமாய்
பொதுமன்றமது இருக்க..
அன்பை பெருக்கும் அருவியாய்
 அரட்டை அரங்கமது இருக்க
செவியும் மனமும் குளிரச்செய்யும் FM என்றும் ஒலித்திருக்க
வேறென்ன வேண்டும் நமக்கு
FTC இன் வெற்றிப்பயணத்தை தவிர..

ஆண்டுகள் பல கழிந்தும்
பிரியாத உறவுகளுடன்
வெற்றி நடை போடுவாய்
13 ஆண்டுகள் அல்ல இன்னும் பலப்பல ஆண்டுகள்

இது
நம்ம FTC..
நண்பர்களால் நண்பர்களுக்காக....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: TiNu on July 28, 2024, 05:27:23 PM



உன்னை கண்டு நான் வியந்து பிரமித்து நிற்கின்றன..
உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது..
 
அன்புடன் ஆசையாய் சோறூட்டும் அம்மாவை மறந்து...
நினைத்த உடனே தோள்கொடுக்கும் அப்பாவை விட்டு...

கல்விக்காகவும் படிப்புக்காகவும் எங்கோ பறக்கின்றோம்..
பறந்த பின்னே உணர்கிறோம்.. தனிமை.. தனிமை.. தனிமை..                                                                                                       

தனிமையில் மனம்வெறுத்து.. தவிக்கும் உள்ளங்களுக்கும்..
நானிருக்கின்றேன் என நம்பிக்கை பூ கையில் கொடுக்கிறாய்..

பணம் திரட்டும் பணிகளில்.. தடங்கல் வந்து தவிக்கும் போது ..
நானிருக்கின்றேன் என தைரிய பூ கையில் கொடுக்கிறாய்..

தவறான காதலில் விழுந்து..  தோற்று தவித்து நிற்கும் போது..
நானிருக்கின்றேன் என ஆறுதல் பூ கையில் கொடுக்கிறாய்..

உன்னை கண்டு நான் வியந்து பிரமித்து நிற்கின்றன..
உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது..

பாடும் திறமைகளுக்கு இவுலகில் அங்கீகாரம் இல்லையே.. என
தவிக்கும் மனதுக்கு.. ஒரு ஆறுதலாய்... ஓர் நிகழ்ச்சி... (படவா படவா )

நான் வடிக்கும் கவிதை பூக்களுக்கு.. ஓர் மேடையில்லையே.. என
தவிக்கும் மனதுக்கு.. ஒரு ஆறுதலாய்.. ஓர் நிகழ்ச்சி.. ( ஓவியம் உயிராகிறது)

நம் குரலும் பண்பலையில் கேட்க.. ஓர் பண்பலை இல்லையே என
தவிக்கும் மனதுக்கு.. ஒரு ஆறுதலாய்.. ஓர் நிகழ்ச்சி.. (சிறப்பு நிகழ்ச்சிகள்)

நம் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல ஒருவருமில்லையே என
தவிக்கும் மனதுக்கு.. ஒரு ஆறுதலாய்..  நிகழ்ச்சி.. (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

பலரின் ஏக்கங்களையும் .. திறமைகளையும்..  கண்டுபிடித்து..
அவர்களின் கனவுகளை மேய்ப்படவைக்கும்..  அன்பே... 
 
உன்னை கண்டு நான் வியந்து பிரமித்து நிற்கின்றன..
உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது..   

இன்றுடன்.. உனக்கோ வயது.. பதிமூன்று நிறைவடைகிறது..
14வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உனக்கு என் வாழ்த்துக்கள்..

இன்று உனை வாழ்த்தும்.. அணைத்து உள்ளங்களும்..
இனியும் உனை  நாடி வரும்.. எல்லா.. நல்ல மனங்களுக்கும்..
 
அவர்களுடன் நானும்.. உன்னுடன்.. மகிழ்ந்திருக்க. - நீ
பல்லாண்டு பலநூறாயிரம் ஆண்டு வாழ் வாழ்த்துகிறேன்..   

 
Title: Re: FTC பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: KS Saravanan on July 29, 2024, 08:27:00 PM
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கமே Wish You Happy Anniversary..!

புதிதாய் பூத்த மலராய்
புது அவதாரம் எடுத்தாய் நண்பனே..
ஒன்றாய் கூடி நட்பை வளர்க்க
மேடையாய் இருக்கிராய் நண்பனே..

கால பயணங்கள் நிலை மாறலாம்
கண்ட கனவுகள் பொய்யாகலாம்
நினைவுகளிள் மாற்றம் காணலாம்
அன்பாய் பழகிய நாட்கள்
என்றும் கடிகார முட்களாய் போகுமே..!

சோகங்களை கேட்க  செவி கொடுத்தாய்
உறவாய் எண்ணிட நட்பை கொடுத்தாய்
நம்பிக்கை எனும் விதையை
மனதில் பதித்தாய்..!
மாற்றங்கள் பல கண்டாலும்
மாறாத அன்பை கொண்டாய்..!

சிக்கல்கள் பல சீண்டினாலும்
சீரான பற்றுடைவயவனாம்
எதிரியையும் நண்பனாக்கும்
வல்லமை படைத்தவனாம்
மலையும் கூட மடுவாகுமே
ஆறுதல் தரும் வார்த்தைகளினால்..!

இங்கே நல்ல பெண்ணாய் பார்த்து
காதல் கூட செய்வோமே..!
மச்சான் என்று சொன்னாலும்
மதிப்பாய் இங்கே வாழ்ந்திடுவோம்..!
அன்பு எனும் தூண்டிலிலே
பாசம் எனும் வலையினிலே
பின்னி பினைந்து வாழ்வோமே..!

அடை மழை பெய்தாலும்
உங்கள் choice ah கேட்டிடுவோம்
கொஞ்சம் late ஆனாலும்
Main ல கூச்சல் போட்டிடுவோம்..!
இசை தென்றல்ல இடம் பிடிக்க
forum க்கு ஓடிடுவோம்..!
ஓவியத்தை உயிராக்க
எழுதுகோலை எடுத்திடுவோம்..!
நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல
நேரம் ஒன்றை ஒதுக்கிடுவோம்..!
என் மன வானிலே
சிறகடித்து பறந்திடுவோம்..!
FCL ஐ நடத்திடுவோம்
வாங்குன CUP ஐ வித்துடுவோம்..!
பாடவா என பாடியே
தூக்கத்தை கலைத்திடுவோம்..!
பட்டிமன்ற தலைப்புகளில்
வம்புகளை இழுத்திடுவோம்..!

கவிதை எழுத தெரியலானாலும்
எதோ எழுதி கிறுக்கிடுவோம்..!


வெற்றிகரமான தனது 13 வருட பாதையை கடந்து 14ம் வருடத்தில் கால் பாதிக்கும் நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்திற்கு, எனது சார்பாகவும் மற்றும் FTC நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறோம்..!

இந்த பயணம் மென்மேலும் தொடர்ந்து இன்னும் பல மைல்கல்களை எட்டி பல சாதனைகளை படைத்து அத்தகைய சாதனைகளையெல்லாம் சரித்திரமாக மாற்றி, வரலாற்றில் தனக்கான நீங்கா இடம் பிடித்து கல்வெட்டுகளிலெல்லாம் FTC யின் பெருமையை பொன்னெழுத்துக்களில் பொறிக்க படவேண்டும் என வாழ்த்துகிறோம்..!