FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 19, 2024, 02:50:17 PM
-
அடர்ந்த இருள் பரவி
ஆழ்மனது அமைதி கொள்ள
தளர்ந்த மனதோடு
தவித்திருக்கும் தனிமையிலே
கலைந்த நினைவுகளை
கவலையோடு அசைபோட்டு
மிகுந்த அயற்ச்சியுடன்
மெல்ல நான் கண் அயர்ந்தேன்.
அங்கே ஒரு நிசப்தம்
எங்கெங்கும் பரவுகிற
நேரமென் இதயம் லப்டப் சப்தமிட
இசையாய் புது விசையாய்
எனக்கும் அது தோன்றிடவே
எந்தன் இதயமுமே
அமைதியிலே ஆழ்ந்திடுதே