FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 18, 2024, 06:06:35 AM

Title: நட்பே துணை
Post by: Mr.BeaN on July 18, 2024, 06:06:35 AM
என்ன நடந்தது என்று நான் சொல்லிடவே
நேரம் ஒன்றினையே எனக்கும் நீ கொடுக்காமல்
சற்றே கோபத்தை என் மீது
காட்டித்தான்
சடுதியில் என் மீது புழுதியை எரிந்தாயே
இப்படியும் நட்பினால் நான் துன்பம்
அடைவேனோ
என்றே சிந்திக்க என் மனதில் தெம்புமில்லை
இருந்தும் உன் மீது நான் கோவம் கொண்டாலே
உரக்க சொல்லிடுவேன் அது மெய் அன்பு இல்லை