FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 02, 2024, 05:53:36 PM
-
காரிருள் நேரத்து பிறையாய்..
கலைஞன் வடித்திட்ட சிலையாய்..
கவலைகள் மறைத்திடும் திரையாய்..
என் கற்பனைக்கெல்லாம் விலையாய்..
மாலை நேரத்து வெயிலாய்..
என் மனதுக்குள் அடிக்கிற புயலாய்..
மதியை மயக்கும் இசையாய்..
என் மனதை ஈர்க்கும் விசையாய்..
செல்லக் குழந்தையின் பிணக்காய்..
காதல் போடும் கணக்காய்..
எல்லாமாய் என்றும் இருப்பாய்..
மெய் காதலை கொண்டே எனக்காய்...