FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on June 05, 2024, 01:47:40 PM
-
அடை மழை ;
ஜன்னலோரம் அமர்ந்தபடி !
கையில்
காப்பியை ஏந்தியபடி !
வானொலியில்
இராஜா கானம் கேட்டபடி !
மனம் எதோ
ஒரு மயக்க நிலையை அடைந்தபடி!
இமை இரண்டும்
தானே மூடியபடி !
மனக்கண்கள்
கண்டது ஏனோ இன்றும் உன்னைத்தானடி ❤️
கன்னம் நனைந்தது , மனம் நகைத்தது
என்றும் அவளை
மறக்கவும் முடியாது நினைக்கவும் ஆகாது🌻
VethaNisha.M😇