FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 02, 2024, 06:41:40 PM

Title: மரம்
Post by: Mr.BeaN on May 02, 2024, 06:41:40 PM
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..

(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
Title: Re: மரம்
Post by: Unique Heart on June 03, 2024, 08:20:32 PM
கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹