FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 02, 2024, 06:41:40 PM
-
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..
(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
-
கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹