FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 13, 2023, 08:47:04 PM
-
வாழ்க்கை
ஒரு படகு போல்
செல்கிறது
ஒரு கரையிலிருந்து
மற்றொன்றுக்கு
முடியின்
கருமையிலிருந்து
வெள்ளை வரையிலான தூரம்,
உடன்
அதே நினைவுகளும்
இதுவரை எழுதிய
எழுத்துக்களெல்லாம்
காதல் அல்ல
ஒருவித பைத்தியம்
எப்படி
காதலிக்க வேண்டும்
என்ற உணர்வின்
பிரதிபலிப்பு
சிலரது உணர்வுகள்
அப்படியே இருக்க வேண்டும்
அதுவே அவர்கள்
நம்முடனான உறவின்
மையம்
புறக்கணிப்பின் உச்சத்தில்
இழந்தது மீண்டும்
கிடைக்க வாய்ப்பில்லை
என்ற உணர்வில்,
இழந்தவற்றின்
மதிப்பு உணரப்படும்
நினைவுகள்
ஒரு வகையான
ஸ்லோபாயிசன்.
மெதுவாக
மெதுவாக
நம்மை
மரணத்திற்கு இட்டுச்
செல்கிறது
சுவையுள்ள
விஷம் போல
ஒன்று மட்டும் உண்மை
அது
நீயும் நானும்
என்றும்
பிரிக்க முடியாத
நினைவுகள்
***Joker***
-
நினைவுகள்
ஒரு வகையான
ஸ்லோபாயிசன்.
மெதுவாக
மெதுவாக
நம்மை
மரணத்திற்கு இட்டுச்
செல்கிறது
சுவையுள்ள
விஷம் போல
Aspartame - Sweet poison enru kelvi paddhu irukken.
Slowpoison um irukku enru thenrichukithen.
Sila ninaivugal kandippa slow poisonaga than irukkum nam vazhvil.
Suvaiulla visham enru therinyuthum anthe ninaivugalil thane vazha virumbigirom sometimes?!
Adutha pathivukku waiting! :)
-
தூரத்தில் இருந்து
பார்த்தால்
காடு தெரியும்
அருகில் சென்றால்
ஒவ்வொரு மரமும்
தனி தனி தான்
வாழ்க்கையிலும்
அப்படிதான்
பார்ப்பவர்களுக்கு
எல்லோரும் இருப்பதாய்
தோன்றும்
அருகில் சென்றால்
அனைவரும்
தனி தனி தான்
மண்ணில்
பூக்கும்
பூக்களை விட
இந்த மனதில்
பூக்கும்
நட்பு
சிறந்தது
இன்றும் நான்
"நீ" என்ற பொய்யை
தெளிவாக நினைவில்
வைத்திருக்கிறேன்
ஏனென்றால்
நீ என்னுடன்
இருந்த காலம்
எனக்கு மிகவும் பிடித்தமானது.
நீ எனக்கு கொடுத்த
ஒவ்வொரு அழகான தருணமும்
உண்மை
என்னிடமிருந்து
உனக்குக் கிடைத்தது
நிபந்தனையற்ற
அன்பு.
நீ ஏன்
போலியாக வந்து
என் மனதை கொள்ளையடித்தாய்
என்பதற்கான பதிலை
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஆசைகளுக்கு
முடிவே இல்லை
அது நம்மை
முட்டாள்தனத்திற்கு
இட்டுச் செல்கிறது
ஏமாற்றம்
என்ற சொல்லுக்கு
என் மனது
சாட்சி
ஓர் நாள்
என் இதயம் வெடித்து
உன் மீதான அன்பின் வேர்கள்
இதயத்திலிருந்து
நரம்புகள் வரை பரவி
என் மூளையைச் சூழ்ந்திருந்தால்,
மற்றவர்கள்
மரணம் என்றழைக்கலாம்
சிலர்
பைத்தியம் என்றும்
**Joker***
-
சில நினைவுகள்
எப்போதும் அப்படித்தான்
நாம் மறக்க
முயலும் போதெல்லாம்,
யாரோ ஒருவர்
அதை நமக்கு
நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்
நாம் மறக்க
முயலும் நினைவுகள்தான்
இருளில் பிரகாசமாக
நட்சத்திரங்களாய்
ஒளிர்கின்றனவோ !?
சில நினைவுகள்
வெளிப்படும்போது -அது
நம் மனதில் பாரமாகலாம் -அது
நம் மனதை மிகவும்
வருத்தப்படுத்தலாம்,
ஆனால்
அந்த நினைவுகளின்
துணையின்றி நம்மால்
வாழ்க்கையை நடத்த முடியாது.
நம்மை நேசிக்க
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்,
நாம் விரும்பும் இதயத்திலிருந்து வரும்
அன்பு மட்டுமே
நம்மை முழுமையாக
மகிழ்ச்சியடையச் செய்யும்
பாதையில் நடக்கையில்
தெரியும் ஓர் குழந்தையின்
சிரிப்பு நமக்குள் கடத்தும்
ஓர் சிறு மகிழ்ச்சி
நம் அந்நேரத்து மனபிரச்னைகளை
புறந்தள்ளிவிட போதுமானதாகிறது
மாறாத
சுவற்றில்
ஆண்டுதோறும் மாறிக்கொண்டிருக்கும்
காலண்டர் போல தான்
மாறாத மாயாத
உன் நினைவுகளில்
ஒவ்வொருநாளும்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
மழை பெய்து முடிந்து
நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அதுபோல தான் உன்நினைவுகளும்
என் மனதில்
ஓடிக்கொண்டிருக்கும்
கடைசி மூச்சு வரை
****JOKER****