FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 13, 2023, 10:22:53 AM
-
பல்லவி
அடி கிறுக்கியே உன்ன தான் நினைக்கையில் சிரிக்கிறேன் மெல்ல தான்
உன்ன பாக்கையில் ரெக்க தான் முளைச்சிட பறக்குதே உள்ளம்தான்
நான் காத்தாடிய போல உன்னால் மாறி போறேனே
நீ பக்கம் வந்து பேசாவிட்டால் வாடி போறேனே
உன் புன்னகையில் தொலஞ்ச என்ன தேட போறேனே
உன் பார்வை என்ன மோத இப்போ ஆடி
போறேனே
சரணம்
உன் பேச்சை கேட்டு சில நேரம் காத்து
என்னோடு தான் எதமாகவே தலையாட்டுதே
உன் மூச்சு காத்து பட்டாலே போதும் பூந்தோட்டமும் பகல் நேரத்தில் பூ பூக்குதே
எல்லாமே நீயே என்றே தான்
சொல்வேன்
உன் பாதம் தேடி நானும் தான் செல்வேன்
உன்னாலே நானும்.உயிர் வாழுவேனே
என் காதல் ஏற்க வா வா பெண்ணே..
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fsitemessages%2Fclickhere%2F00000s17_e0.gif&hash=6fb69608566473577667dc1f410b96a045e2e7fd) (https://www.mediafire.com/file/wed2iz35yrxbrek/New+recording+31.mp3/file)