தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 07, 2023, 07:55:35 PM
Title: உறவுகள்!!
Post by: joker on December 07, 2023, 07:55:35 PM
பல வண்ணங்கள் கொண்ட பட்டாம்பூச்சி வந்தமர்கிறது கைகளில் ரசிக்கும் முன் ஏனோ பறந்து விடுகிறது
வாழ்க்கையில் சில உறவுகளும் அப்படியே அவ்வுறவை புரிந்து கொள்ளும் முன் பிரிந்துவிடுகிறது
திசை தெரியாமல் பறவைகள் என்றும் பறப்பதில்லை மனிதன் மட்டும் எத்திசையில் பயணிக்கும் இவ்வுறவு என அறையாமல் வாழ்கிறான்
அன்பு, காதல் குறித்து பேசுகையில் நம்பிக்கையும் அழையா விருந்தாளியாய் வந்து விடுகிறது வார்த்தைகளில்
அவரவரை அவரவர் ரசிக்க கற்றுக்கொள்ளும் நிலை வந்தால் தனிமை ஆனந்தமாகும்
அதுவே பிறரையும் நேசிக்க கற்றுக்கொண்டால் வாழ்வு பேரானந்தமாகும்
வர்ணங்கள் எளிதில் வசீகரிக்கும் கவிதையில் பொய் எளிதில் நம்மை ஈர்ப்பதை போல
பெரும் வியப்பு எனக்கு எது எனில் கோடி மக்கள் உலகில் உண்டு அதில் பல நூறு என் வாழ்வில் தினமும் காண்கிறேன், கடக்கிறேன் அதில் நமக்கு பிடித்த முகம் மட்டும் நினைவில் தங்கி தினமும் அம்முகம் காண மனம் ஏங்க துவங்குவது தான்
அம்முகமாக நம் முகம் இருப்பது நம் பாக்கியம்
அதிலும் முகம் தெரியாமல் எழுத்தால் அறிமுகமாகும் சில நட்புக்கள் பேரன்பின் உச்சம்
***Joker***
Title: Re: உறவுகள்!!
Post by: Ishaa on December 08, 2023, 03:39:34 AM