FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 23, 2023, 02:58:39 PM
-
(https://i.ibb.co/LZ8pXG1/Screenshot-2023-11-22-121127.png) (https://ibb.co/ZMVTpZx)
***Joker***
-
முதல் முத்தம்
முதல் முத்தம்
எனக்கு நினைவில்லை
ஆனால்
என்னை கைகளில்
ஏந்தி குடுத்த
என் தாய்க்கு
இனித்திருக்கும்
இரண்டாம் முத்தம்
தன்னை என்னில் கண்ட
என் தந்தை
கொடுத்திருக்க கூடும்
மூன்றாம் முத்தம்
என் பாட்டி
தன் மகனை
மீண்டும் குழந்தாய்
கண்ட நொடி
நினைத்து
பூரித்து கொடுத்திருக்க கூடும்
இன்னும் பல
தாயையும் சேயையும்
காண வந்த உறவுகள்
குழந்தை என
கொஞ்சி கொஞ்சி
கொடுத்திருக்க கூடும்
ஆனால்
அனாதையாய்
விட பட்ட குழந்தைக்கு
யார் கொடுத்திருப்பார்
முதல் முத்தம் ?
***JOKER***
-
அள்ளி எடுத்து
அன்பெனவே பார்த்து
மார்போடு அனைத்து
மனதார மகிழ்ந்து
உச்சி முகர்ந்து
உள்ளார்ந்து உருகி
நெற்றி தணிலே
தன் இதழ் பதித்து
தாயும் பிள்ளைக்கு
முதல் முத்தம் கொடுத்தாள்!!
-
@joker
Azhagiya Kavithai.
Sinthikka veikkum Kelviy udan mudikirathu ungal kavithai.
Bathil illa kelvi udan mudikirathu enru solla mudiyavillai.
Kandippa oru Bathil irukkum aanal athu anthe kulanthai ariyumo theriyathu.