FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 20, 2023, 01:50:03 PM

Title: தனிமை...
Post by: Mr.BeaN on November 20, 2023, 01:50:03 PM
வலி நிறைந்த நாட்கள் நமது,

வழி நெடுக வாழ்வில் இருக்கும்..

இழி நிலையில் நாமும் இருந்தால்,

இளக்காரம் செய்யும் மனிதர்,

துளி துளியாய் கண்ணீர் பெறுக,

தூண்டிய படியே இருப்பார்..

கலி காலம் இதுவே என்று,

புலம்பியே நம் நாளும் கழிப்போம்..

கற்பித்து அவரும் நமக்கே,

ஆசானாய் ஆகிப் போவார்..

எந்நாளும் புதிதாய் கற்கும்,

மாணவர் தானே நாமும்..

அப்படி நாமும் கற்று,

அத்தனை அறிவும் பெற்று,

எத்தனை துயர் வந்தாலும்,

சட்டென கடந்து செல்ல,

சற்று நாம் தனியே சென்று,

உற்றதாய் சிந்திப்போமே!!


இப்படியாக தனிமை,

நமக்குமே இன்பம் குடுக்கும்,

எப்படி யார் சொன்னாலும்,

எனக்கு என் தனிமை இனிமை!!!

அன்புடன் திருவாளர் பீன்