ஜான் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை தான் என்று
சான்றோர்கள் கூற்றாக
ஊருக்குள் பேச்சுண்டு
சொன்னவங்க எல்லாரும் மண்ணோடு போனாங்க
சொன்ன சொல் மட்டும் தான்
இப்போ இங்க சுத்துதுங்க
ஆணொண்றும் பெண்ணொன்றும்
ஒரு வீட்டில் இருந்தாலும்
பெண் பிள்ளை மட்டுமே
பாசமாக வளப்பாங்க
ஆண் பிள்ளை தேடித்தான் வீட்டு வேலை கொடுப்பாங்க
அதுக்கும் தான் காரணமா பல கதைய சொல்வாங்க
அதுதானே போகட்டும்னு அப்படியே இருந்தாக்க
அப்புறமா படிக்க வச்சு தொல்லை
தினம் தருவாங்க
படிச்சு முடிச்சிட்டு நிம்மதினு
நெனச்சாலும்
பக்குவமா பேசி ஒரு வேலை பாக்க வைப்பாங்க
வேலைக்கு தான் போயி நாங்க சம்பளத்தை வாங்குனதும்
பூரா காசையுமே வீட்டுக்குனு பறிப்பாங்க
கால்கட்டு கதை சொல்லி கல்யாணம் பண்ணி வச்சு
அப்போ கூட அங்கையுமே புருசன்
பொறுப்புதானே
கல்யாணம் முடிச்சாச்சு சந்தோசம் இனிதானா
என்று மனசுக்குள்ள ஒரு கேள்வி
தோனுறப்போ
கர்ப்பமான மனைவி குழந்தை ஒன்னு பெத்தெடுப்பா
அப்புறம்தான் அப்பாவா ஆண்
பொறுப்பு கூடுமுங்க
அப்புறமா அததானே படிக்க வச்சு
ஆளாக்க
காலம் பூரா நாங்க கருவாடா
காயுறோமே
ஆணோட சந்தோசம் எது தான்னு
நாங்களுமே
ஆண்டு பல போன பின்னே
அப்புறமா புரிஞ்சிக்கிட்டோம்
குடும்பம் சுமக்குரது தானே
எங்க சந்தோசம்.
இப்படித்தான் காலம் முழுக்க
பொறுப்பான ஆளானோம்
இந்த கதை நடக்கையிலே நாங்க எப்போ ஆண் ஆனோம்?
பெண்ணியம் பேசும் பெண்களுக்கெல்லாம்
கண்ணியம் காக்கும் எந்தன்
கருத்தாய்
சொல்வது யாதெனில் ஒன்றே ஒன்று
நாங்களும் மனிதன் தான் என்று.!!!
[/color]
அன்புடன் திருவாளர் பீன்