FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 29, 2023, 01:56:43 AM
-
வீதியில் தான் ஒரு
விளக்கென நான்
யாரும் சீண்டமலே
பாரினில் ஓர்
சூழ்பனியென நான்
யாரும் விரும்பாமலே
காரிருள் தான் அதில்
கரும்பொருள் நான்
யார்க்கும் தெரியாமலே
கண்டவர் யார்
என் காயங்களை
என்று புரியாமலே
வாழுகிற ஒரு
ஜீவனும் நான்
எதுவும் அறியாமலே...