FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 27, 2023, 08:18:05 PM

Title: நட்பாய் நீ
Post by: joker on October 27, 2023, 08:18:05 PM
சின்ன சின்ன சண்டையில்
சிறுக சிறுக சேமித்தோம்
நமக்கான உறவை

என் தாய் தான்
உலகமென்று
நினைத்திருந்த வேளையில்
எனக்கொரு இன்னொருமொரு
தாயானாய்
நீ

பரஸ்பரம் பகிர்ந்துகொண்டது
எதுவும் நினைவில்லை
என் நினைவே நீயாகி போனதால்

எனக்கு காய்ச்சல் வந்த
வேளையில் உனக்கு
உடல் சுட்டிருக்குமோ
மருந்தோடு  என் வாசலில்
நீ

சாலையில்
அழகிய  பெண்ணை
கண்டால் என் கண்
போகும் பார்வையின்
பின்னால் உன் பார்வை
சிரித்துக்கொண்டே
டேய் ...ம்.. ம்.. என்பாய்
நீ

நம் மனம் மட்டும் அல்ல
நம் வீட்டு வறுமையும்
நம்மை போல
பிரியாமல் சேர்ந்தே
இருக்கிறது

இரவானலும்
என்னுடன் பயணிப்பதையே
விரும்பியது உன் மனம்

ஆண், பெண்
என்பதை தவிர
நமக்குள் வேற்றுமை
நான் கண்டிலேன்

கோயிலானாலும்
தேவாலயமானாலும்
சேர்ந்தே சென்று
பிரார்த்திப்போம்
மற்றவர் நலம் காண

ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கையாய் பேசி
சிரிக்கையிலும்
ஒன்றாய்  அமர்ந்து
உண்ணும்போதும்
ஒன்றாய் பயணிக்கையிலும்
ஊர் சொன்னது
காதலர் என்று

எப்படி சொல்வேன்
அவர்களுக்கு
காதல் ஓர் உணர்வு தான்
ஆனால்
எங்களுடையது
உயர்வான உறவான
நட்பென்று

விதி செய்த சதி
கண் காணா தூரத்தில்
நீ
உன் நினைவுகள் மட்டும்
என்றும் என்னருகில்

தேவதை நீ
நிஜம் என்று
நிழலை பறித்து
செல்கிறாய்

உன் நினைவுகளுடன்
காகிதத்தில் நிரப்பப்படாத
வலிகளுடன்
உன்னுடன்  நட்பாய்
கைகோர்க்க
காத்திருக்கிறேன்


***JOKER***


Title: Re: நட்பாய் நீ
Post by: Mr.BeaN on November 01, 2023, 06:53:35 PM
Vanakkam sago ungal kavithaiyai enudaiya thozhi oruvar padiththu vittu migavum azhagaai irupathal
Unaku nandriyum vaazhthum koora sonar.
Thodarattum ungal kavi pani vazhthukkal
Title: Re: நட்பாய் நீ
Post by: joker on November 01, 2023, 09:13:56 PM
 :) :) Nandri:) :)

padithatharkum , bathil ittatharkum

Mikka Nandriyum Vaazhthukkalum  Thangalukkum thangal thozhikum

God bless you