ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 319
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F319.jpg&hash=dd439e64e663332bc8764e578d58355ff170c28d)
நொடிகள் உறையுமா ?
குளிரும் இரவின் மடியில்..
மிளிரும் தெருக்கள் வழியில்..
உனை நான் அறிந்தேன் விழியில்..
சேர்ந்தோம் நம் உலவிரவில்..
தயங்கி நெருங்கும் அடிகள்..
சிறிதாய் நிமிரும் இமைகள்..
இதயம் உறையும் கணங்கள்..
நுழைந்தோம் புது உலகில்..
ஏன் நொடிகள் உறையவில்லை ?
உறைந்த நினைவுமில்லை..
விலக மனமுமில்லை..
எங்கள் உலகில் எதற்கு எல்லை ?
காதல் காலமிது..
என்றும் காதில் கேட்பதற்கு..
ஓர் வார்த்தை மேல் எதற்கு அன்பே??
உரசல் மொழிகள் பகிர்ந்தோம்..
உளறி சிரித்து மகிழ்ந்தோம்..
உருவம் அதையும் மறந்தோம்..
உயிரோடுயிர் இணைந்தோம்..
விரல்கள் இணைந்தே இருக்க..
இதழைச் சுவைக்க நெருங்க..
கடைசி நொடியில் சிரிக்க..
மனதால் மணம் முடிக்க ..
ஏன் இரவு உருகி விட..
என்று அடுத்த இரவு வர?
உடல்கள் விலகிச் செல்ல..
எங்கள் நிழல்கள் நடனமிட..
நானும் சிறகடிக்க..
எந்தன் கால்கள் தரைமறுக்க..
உன் பார்வை சிறைபிடிக்க நின்றேன்..