தம்பதனியா இராசதானி வம்சம்
மூன்றாம் விஜயபாகு
மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதேனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன்.தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஜந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது.
பொலன்னறுவை இராசதானி வம்சம்
முதலாம் விஜயபாகு
ஸ்ரீ சங்கபோதி (கி.பி.1055 - 1110 ஆட்சிக்காலம்) என்னும் பெயரைப்பெற்றிருந்த முதலாம் விஜயபாகு இலங்கை வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக் கொண்டிருந்தான்.தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் தமிழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்