FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on April 10, 2012, 06:31:09 PM

Title: அரியாசனங்கள்!
Post by: Yousuf on April 10, 2012, 06:31:09 PM
படித்ததில் பிடித்தது!

மனைகளாய் விரிந்து கிடக்கிறது
பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்!
பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக்
கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்!
வாகன நெருக்கத்தில் சதை பிளந்து
காட்சியளிக்கும் சாலைகளினிடையே
மண்டையோட்டின் ஓவியங்கள்!
குடி நீர் இல்லாத போதும் வெட்டுருவிற்கு
பாலூற்றும் அடிமைகளின் அணிவகுப்பில்
எத்தனையோ நடிகர்களின் அரியாசனங்கள்!
போதை வருமானமும் செரிமானிக்காத
ஊழல் உணவிலும் வேதாந்தம் பேசும்
அரசியல் வியாதிகளாய் உலக வங்கியின்
கடன் சுமைகள்!
எலும்புக்கூடுகளில் விலைவாசியின்
கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும்
உழவர்குல நடை பிணங்கள்!
நாட்டின் சாபக்கேடாய் முதுகெலும்பொடிந்த
எழுத்தாணிகளின் படிமக்கூறுகள்!

-மணவை அமீன்
Title: Re: அரியாசனங்கள்!
Post by: ஸ்ருதி on April 10, 2012, 08:59:00 PM
எலும்புக்கூடுகளில் விலைவாசியின்
கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும்
உழவர்குல நடை பிணங்கள்!

நல்ல கவிதை ..

Title: Re: அரியாசனங்கள்!
Post by: Global Angel on April 10, 2012, 11:08:23 PM
Quote
எலும்புக்கூடுகளில் விலைவாசியின்
கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும்
உழவர்குல நடை பிணங்கள்!

நல்ல கவிதை ..
 ;)
Title: Re: அரியாசனங்கள்!
Post by: Dharshini on April 10, 2012, 11:49:26 PM
dei anna ne samuga sinthanai kavithai  ah podura da niceeeee
Title: Re: அரியாசனங்கள்!
Post by: Jawa on April 11, 2012, 05:01:52 PM
போதை வருமானமும் செரிமானிக்காத
ஊழல் உணவிலும் வேதாந்தம் பேசும்
அரசியல் வியாதிகளாய் உலக வங்கியின்
கடன் சுமைகள்!



Usuf machi arumaiyana kavidhai varigal... neenga signaturela potu irukura pola marapadhu makkalin iyalpu ninaivu paduthuvadhu emkadamai :) :) :) :)