FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DuskY on June 22, 2021, 08:08:23 PM
-
கனவுகளில் என் கற்பனை காதலனே!
என்றும் உன்னை எதிர்பார்க்கிறேன். ...
என் நிழலாக! என் நினைவாக! என் உறவாக!
என் உயிராக ! என் உணர்வாக! என் கனவாக!
என்னுயிர் சேரும் நாள் எது ?
என ஒவ்வொரு நிமிடமாக !
நாழிகையாக! நாட்களாக!
யுகங்களாக எதிர்பார்த்திருக்கிறேன்.
உன் தோள் சேர எனது பல வருட கசப்பான துன்பங்களும்
ஏக்கங்களும் ! நிறைவேறாத கனவுகளும்
தினம் தினம் பயணிக்கிறன !
நித்தம் சந்திக்கும் சில உறவு நீ என நினைத்ததும் உண்டு!
பின் அவர் தந்த வலிகள் நீ இல்லை என உணர்த்தியதும் உண்டு !
இத்தகைய நிர்பந்தத்திற்கு என்னை ஆளாக்காமல்
நீ விரைவில் என்னிடம் வர பிரபஞ்சத்திடம் அணு தினமும் வேண்டுகிறேன்!
இப்படிக்கு உன்னில் என்றும் இருக்கும்
பெண்மை நான்
By Arasi
-
Nice kavithai
-
super kavithai arasi nirya ezhuthunga
-
nalla eluthu murai migavum nanraka ulathu thodarnthu eluthavum
-
Kandipa eluthuren frnds neenga support pana ok
-
முதல் கவிதையிலேயே தடம் பதித்த தங்கள் கவிதை, மென்மேலும் பொதுமன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் அரசி.
-
அரசி வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். உங்கள் கவிதைகள் நமது
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியலையும் வரணும். எதிர்பார்க்கிறேன் அரசி. வாழ்த்துக்கள்
-
சூப்ப்பர்ர்ரூ
-
மிக அருமை முதல் கவிதையே அரசி...🤗
Welcome to forem arasi congrats 👏
கனவு காதலனை நினைவில் வரவைக்கும் கவிதை...😍
மென்மேலும் உங்கள் படைப்பை எதிர் பார்க்கும் உங்கள் தோழன் YesKay👍