FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 07, 2012, 09:04:41 PM

Title: வர்ணனை
Post by: aasaiajiith on April 07, 2012, 09:04:41 PM
என் தமிழையும் ரசிக்க ஆட்கள் இருக்கின்றனரே என
தன்னிறைவு அடைய தயாராகி இருந்த தருணத்தில்
தன் மதி முகத்தின் பிரதி (நிழற்படம் )அதனை
என் மின் அஞ்சல்  முகவரிக்கு அனுப்பி வைத்து
தன் முகத்தை பற்றி, என் வரிகளில், வர்ணனை வேண்டி
தன்னுள் தோன்றிய ஆசையாய் அதனுள்
என்னனவோ எழுதி ஒரு முழு படிவமாய்
விண்ணப்ப படிவமாய் அனுப்பியவரை ரதியோ  என்று தான்
எண்ண தோன்றியது , கண்கள் குளிர
அக்குளிர் நிறைந்த
நன் முகத்தை நான் பார்த்த பொழுது

ஒன்றும் இல்லா என் பதிப்பை தான்,
பளபளக்கும்தன் பாராட்டால் பலபடுத்தி ,
பெருமை சேர்ப்பாள்என்றிருந்தேன்,
இப்படி ஒரு வாய்பளித்து
என் மதிப்பையும் மன்றத்தில் பலப்டுத்தினாள்
என் மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரியவள் .


வர்ணனை  வெகு விரைவில் .....
Title: Re: வர்ணனை
Post by: Bommi on April 07, 2012, 10:44:56 PM
அஜித் இந்த வர்ணனை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் .
Title: Re: வர்ணனை
Post by: aasaiajiith on April 07, 2012, 11:22:11 PM
Kalaippinil Kanmoodi Kavizhndhirundha Kaarpanai kudhiraigall
Kaniyaval Un Kaathiruppu Arindhadhum Kann Vizhiththu vittadhu.....

Konjum Kaaththiru.
Kattavizhththu Vidugirein Karppanai Kudhiraigalai....
Title: Re: வர்ணனை
Post by: aasaiajiith on April 08, 2012, 08:56:56 PM

பனைவெல்லம்
அதனோடு வெள்ளாட்டுப்பால்
இரண்டையும் ஒன்றுடன் ஒன்று
இணையாக பிணைத்து
பதமாக பதபடுத்திய நல்
சக்கரை பாகினை இணைத்து
மூன்றும்  ஒன்றாய் கலந்த
கலப்பினில் முழுதாய் 
முகம் முழுதாய், பதிய முக்கி விட்டு
மூன்று நாள் கழித்து வெளியில்
எடுத்ததை போன்ற உன் முகம்
அதில் கொள்ளை அழகாய்
வெள்ளை விழி படலம் கொண்ட
கோலி குண்டு கண்கள் ,

உன் முழு முகத்தை ரசிக்க
மட்டும் மூன்று ஆயுள் வேண்டி
என் வரம் வேண்டினால்

வரம் பெற்றபின் ,அதில் இருந்து
இரண்டே கால் ஆயுளை உன் மூக்கை ரசிக்க
(,திருட்டுத்தனமாய்) மட்டும்
எடுத்து கொள்வேன் !
அவ்வகை அழகு மூக்கும்
அதன் கீழ் அழகாய் இணையாய்
ஒட்டி பிறக்க பட வேண்டிய
ரெட்டை குழந்தைகளாய் ,
வெட்டி எடுக்கப்பட்ட ரோசாபூ 
இதழ்களோ என எண்ண
தோன்றும் ரோசா நிற உதடுகள் .

பஞ்சத்தில் தவிக்கும் பல நாட்டின்
வஞ்சத்தை வாங்கி கட்டி
கொள்ள வேண்டியிருக்குமோ
என ,என்னை அஞ்சவைக்கும்
உன் வஞ்சமில்லா புசு புசு
பஞ்சு கன்னங்கள்
                               
                          ( VARNANAI THODARUM ...... )
Title: Re: வர்ணனை
Post by: suthar on April 08, 2012, 10:46:22 PM
varnanai arumai
thodara vaazhthukkal
varnanaikuriyar yaaro.......
yaaraga irupinum mathipil uyarnthavar.....
endru soliya piragu intha kelvi thevaiyatrathu ena ninaikiren
kelviyum bathilum ivaney endraal piragen kelvi yen?
iyam ezhum....
enakum athey iyamthaan.....
Title: Re: வர்ணனை
Post by: Dharshini on April 09, 2012, 07:49:00 PM
enavo nadakuthu ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)
Title: Re: வர்ணனை
Post by: aasaiajiith on April 10, 2012, 12:19:10 AM
அஜித் இந்த வர்ணனை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் .

காக்கவைத்ததில்  கூடுதல்
கால தாமதம் ஆனதனால்  தானோ??

வெறுமென காத்திருந்தவள்
 இப்போது கூடுதலாய்
மௌனம்  காக்கின்றாய் ???
Title: Re: வர்ணனை
Post by: supernatural on April 13, 2012, 02:16:25 PM
நல்ல வர்ணனை ...
இனிமை  தமிழால் ... அழகான  வார்த்தைகளால்...வர்ணிக்கப்பட ...
வர்ணிக்கப்பட்டவர்....
பெரும் பாக்கியசாலி ....
தொடரட்டும் உங்கள் வர்ணனை....