FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 12, 2020, 05:42:53 PM
-
மின்மினியாய் ஒளிவிசி
கண்மணிகள் விளையாடும்
இரவெல்லாம் இந்நாளில்
வெளிச்சங்கள் உருவாகும்
தீபங்கள் எரிவதனால்
தீமைகள் அழிந்துவிடும்
விண்ணோடும் மண்ணோடும்
வெளிச்சங்கள் உருவாகும்
விளையாடி விிளையாடி
சொந்தங்கள் மகிழ்ந்திருக்கும்
மனுதர்மம் மறைந்த இன்று
சமதர்மம் பிறந்திருக்கும்
எம்மதமுமம் இந்நாளில்
சம்மதமாய் வாழ்ந்திருக்கும்
வனவாசம் முடிந்து இராமபிரான் வந்த தினமே இன்று
இதிகாசம் சொல்கிறது
நாரகாசூரன் வதம் என
பாரதமும் சொல்கிறது
மகாவீரர் நிர்வானம் பெற்ற நாள்
சமணமதம் சொல்கிறது
பொற்கோவில் கட்ட தொடங்கிய நாள் என சீக்கியமும்
சொல்கிறது
உலக்கெங்கும் கிருத்துவமும் இந்நாளில் மகிழ்கிறது
எல்லா நாடுகள்
எல்லா மதங்கள்
எல்லா மக்களும்
ஏற்று கொண்டாடி
மகிழும் திருநாள்
தீபஒளி திருநாள்
அனைவருக்கும்
வாழ்வில் மகிழ்ச்சி
நிறைந்திருக்க இந்த
நன்னாளில் வாழ்துரை
வழங்குகிறேன்.....
🌹பிரியாசிற்பி🌹
-
Nandri Shirpi. Deepavali-in kaaranangal arinthu konden ungal kavithaiyil
en iniya Deepavali nalvaalthukkal...
-
நன்றி ...🌹உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்