FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Evil on July 16, 2020, 07:30:46 AM
-
என்னவளின் மனது கள்ளம் கபடம் அறிய மனது
பேசும் பேச்சினில் கடவுளின் குழந்தையானவள் !!!
மேகங்களில் ஒளிந்து விளையாடும் தேவதையானவள் அவள் !!!
மனதில் நினைப்பதை உடனே சொல்லக்கூடியவள் !!!
அன்பில் அன்னை போன்றவள் கருணையில் கடவுள் ஆனவள் !!!
கோவத்தில் கொஞ்சும் குழந்தை போன்றவள் !!!
மண்ணில் வாழும் உயிர்களை நேசிக்கும் உயிரானவள் !!!
அவளின் கண்ணீர் கூட கருணைகள் காட்டிடும் கருணையானவள் !!!
கற்பனையில் கண்களை கவரும் தேவதையானவள் !!!
என்றும் அவளின் அன்பை தேடும் நான்!!!
-
nice kavithai Evil!
koodiya seekiram aval anbu kidaikka vaazhthukkal! :)