FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on April 29, 2020, 09:33:56 PM

Title: மன ! வலியின் "சினம்".
Post by: Unique Heart on April 29, 2020, 09:33:56 PM

நினைவுகள் அனைத்தும் "ரணம்" ஆகவே !
என் சிந்தனை எல்லாம் "சினம்" ஆனதே.

நினைவுகள் நெஞ்சினில் நிறைந்து நிற்க !

நினைவிற்கு உரிய "நண்பன்" அவன் ,
இல்லை என்பதை நினைக்க !
   
என் சிந்தனை அனைத்தும் "சினம்" ஆனதே.

உறவே !! என் துயரத்தில் துணை நின்றாய் நீ,,   
இனி நீ இல்லை எனும் துயரத்தை எங்கனம் ஏற்பேன்?..

என் சகோதரா !!!
இனி என் "நினைவுகளில் மட்டுமே உனை  காண நேரும்"
என்பதை நினைக்க,

என் சிந்தனை அனைத்தும் "சினம்" ஆகுதே...!!!!

இறைவா !! என் நண்பன் அவனை,
உன் ஈகையின் நிழலில் இழைப்ப்பார செய்வாயாக................