FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 01, 2012, 06:51:13 PM
-
சிந்திக்க ஆரம்பித்தேன்
சித்தம் கலங்கியதே
சிரம் சுடுகிறதே
சித்திரம் கலைகிறதே
சித்தாந்தம் மாறுதே
சிலம்பாடுதே வாதம்
சிலையும் கலையும்
சிரிப்பும் கவலையும்
சிற்றின்ப வேட்கையும்
சிறுமையும் வெறுமையும்
சிலிர்க்காத மனிதமும்
சிறக்காத சிற்றுண்டியும்
சிலவும் பலவும்
சிறிதும் நினையாமலே
சிந்தித்த பின்னாலே
சிக்கான நூலானதே
சின்னாபின்னமானதே
சிறு தூக்க சுகமும்
சிவந்தன கண்ணும்
சிறைப்பட்ட மனமும்
சில்லென்ற பனியில்
சிங்கார கற்பனையில்
சிக்காத சுரமொன்று
சிந்தனை தருமென்று
சிறுமிக்கு தெரியாதோ
சிப்பிக்குள் முத்தாய்
சிறப்பாய் உருவாக
சிறு யுகம் காத்திருப்பேன்
-
சி வரிசையில் சிறப்பான கவிதை ஜாவா ... ஆமா யாருக்காக காத்திருப்பு
-
Angel athu elam secret solla matene....
-
நல்ல கவிதை ஜாவா மச்சி!
ஒரே எழுத்தில் தொடராக ஒரு கவிதையை எழுத தனித்திறமை வேண்டும்!
-
En sinthaiyil
siru vinaa.? Ivvalavum
sinthithavan
siragadika maranthathen
siragu mulaikaathathaala alla
siragu odinthu vidum enbathalaa alla
Sikkanamaai ezhutha ninaithathaalaa.