FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 17, 2019, 09:01:11 PM

Title: புரியாத புதிர்
Post by: சிற்பி on November 17, 2019, 09:01:11 PM
  காற்றடிக்கும் போதெல்லாம்
இலைகளுக்குள் ஓசைகள்
காய்ந்துவிட்ட போதிலும் பூக்களுக்களுக்குள் மௌனம் தான்

சிலை வடிக்கும் போதெல்லாம்
கல் பிறக்கும் ஓசைகள்
உருவம் வந்த போதிலும்
கடவுளுக்கு மௌனம் தான்

கரை தழுவும் போதெல்லாம்
அலைகளோடு ஓசைகள்
புயலடித்த போதிலும்
ஆழ்கடல் அமைதி தான்

அன்பு கொண்ட நெஞ்சிலே
ஆர்ப்பரிக்கும் ஆசைகள்
அனைத்தையும் துறந்திடு
உயிர் வரைக்கும் அமைதி தான்

நிகழ்காலம் என சொன்னதும்
போனதென்ன காலங்கள்
நிஜமாக கொஞ்சம்
நினைவோடு மிச்சம்
வாழ்வதென்ன நெஞ்சங்கள்

.....?