FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on July 26, 2011, 08:01:12 PM

Title: சொன்னால் மட்டும் திருந்தவா போறாங்க
Post by: vedhalam on July 26, 2011, 08:01:12 PM
மழையை உங்களுக்கு பிடிக்குமெனில் நனைதல் மட்டும் பத்தாது . மழை பெய்ய உதவ வேண்டும்...

இளமையாக தோற்றமளிக்க 100 வழிகள் புத்தகத்தை வாங்குகிறாள் 18 வயது பெண்...

ஒன்றுக்கும் உதவாத டேட்டாவை பாதுகாக்கும் முயற்சியில் 10 ல் 1 பங்கு கூட உறவை பாதுகாப்பதில் காட்டுவதில்லை...

பேரீச்சம் பழம் கூட இல்லை - பழைய மதர்போர்ட் / ப்ராசசர் / மானிட்டருக்கு...

இந்தியாவில்தான் விசா வாங்குவதை விட பாஸ்போர்ட் பெறுவது கடினம்...

மாணவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல எப்படித்தான் இரு தரப்பும் நடிக்கின்றனரோ.# சமச்சீர் கல்வி.

முப்பது ரூவாய்க்கு கூல்ட்ரிங் பெட் வாங்கி குடிச்சுட்டு, அத நசுக்கி, கால்ல போட்டு மிதிச்சு, உதைக்கிரதுல அப்படி என்ன சந்தோஷத்தை கண்டார்களோ?

கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன் தான் நிறையத்தேரிகிறது. இதற்குப் பெயர்தான் தெய்வீகக் காதலோ?

ஆண்களுக்கு Lol சொல்லுகையில் அது "lots of laugh" என்றும் பெண்களுக்கானால் அது "lots of love" என்றும் அர்த்தப்படுகிறது... # LOL

வாங்குற சம்பளத்தை விட அதிகமான காசுக்கு போன்வாங்குவதற்கு பேருதான் "கெத்து'காமிக்கிறதா? #முடியல எசமான் #எங்க ஊர்ல இதுக்கு பேரு கொழுப்பு...

உலகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக வேண்டும் என்று நினைப்பவன், அவனுக்கே தெரியாமல் சிலருக்கு துரோகியாக இருப்பான்...

கான்வென்ட்டுகளில் தமிழ் கூட ஆங்கிலத்தில் தான் சொல்லித்தரப்படுகிறது#Take the rhyme in page 10, this is திருக்குறள் written by திருவள்ளுவர்...

கைகளெங்கும் ரேகை நதிகள். ரசிப்பவனுக்கு நதி. அற்றவனுக்கு விதி...

கோபத்தில்.. துள்ளி விழுந்தன வார்த்தைகள் மீனாய்! உலர்ந்தன உறவுகள் காய்ந்த கருவாடாய்!!!

பொதுகழிப்பறையில் காலி மது பாட்டில் # டேய்! அங்க (!)அடிக்கவே முடியாது. எப்படிடா! குடிக்கறிங்க.

 நட்பின் போலியான சூட்சுமம் அறிந்த பின் வார்த்தைகள் மட்டுமே பேசும் உள்ளங்கள் அங்கு பேசாது ...

இன்றைய தமிழ் கூறு நல்லுலக காதல்களில் அபெக்க்ஷனும் அதிகம், அபார்ஷனும் அதிகம்.!!!

சிகப்பு அழகல்ல நிறம், ஆங்கிலம் அறிவல்ல மொழி...

இன்றை நினைத்து நேற்றை மாற்ற முயல்வதை விட நாளைய மாற்றத்திற்கு இன்றே ஏதாவது மாற்ற இயலுமா என்று யோசிப்பவனே புத்திசாலி...

இன்று நமக்கு கிடைக்கும் விலைமதிப்பில்லாத அன்பின்'மதிப்பு'நாளை ஒரு நாள் அது கிடைக்காமலே போகும்போது மட்டுமே உணரப்படுகிறது...

மூடத்தனம் என்றாய் என் காதலை மூர்க்கன் நான் சிரித்துக் கொண்டேன் உன் காதலால்...

சிலருக்கு காதல் ஒரு நாடகம்: அதை பூங்காக்களில் அரங்கேற்றம் செய்கிறார்கள் இலவசமாக...

ஹால்ஸை அதிகாரப்பூர்வமாக 50 பைசா நாணயமாக அறிவித்து விடலாம்...

பெண்ணின் கோபமும், ஆணின் காமமும் ,அவர்களின் சிந்திக்கும் திறனை, அற்றுப் போக செய்து விடுகின்றன!

அரசாங்க ஊழியர்களும் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பதாய் இருந்தால் நம் அருமை புரியும்...

ஆதாம் ஏவாள் சீனாவில் பிறந்திருந்தால் பிரச்சனை இல்லை,ஏன்னா, பழத்த விட்டிட்டு பாம்பையே திண்ணுருப்பாய்ங்க...
Title: Re: சொன்னால் மட்டும் திருந்தவா போறாங்க
Post by: Yousuf on July 26, 2011, 08:24:32 PM
Quote
இன்றை நினைத்து நேற்றை மாற்ற முயல்வதை விட நாளைய மாற்றத்திற்கு இன்றே ஏதாவது மாற்ற இயலுமா என்று யோசிப்பவனே புத்திசாலி...

இன்றைய தமிழ் கூறு நல்லுலக காதல்களில் அபெக்க்ஷனும் அதிகம், அபார்ஷனும் அதிகம்.!!!

உலகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக வேண்டும் என்று நினைப்பவன், அவனுக்கே தெரியாமல் சிலருக்கு துரோகியாக இருப்பான்...

எதார்த்தமான உண்மைகளை நகைச்சுவை தருகிறீகள் வேதாளம் மச்சான்...!!!

சிந்திக்க கூடிய விடயங்கள் மட்டும் அல்ல சிந்தித்து நம்மை சீர்திருத்தி கொள்ள வேண்டிய  விடயங்களும் கூட...!!!

உங்களுடைய சீர்திருத்தம் எங்களுக்கு தேவை...!!!

உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர் பார்க்கிறோம்...!!!
Title: Re: சொன்னால் மட்டும் திருந்தவா போறாங்க
Post by: Global Angel on July 27, 2011, 10:01:27 PM
உலகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக வேண்டும் என்று நினைப்பவன், அவனுக்கே தெரியாமல் சிலருக்கு துரோகியாக இருப்பான்...



பெண்ணின் கோபமும், ஆணின் காமமும் ,அவர்களின் சிந்திக்கும் திறனை, அற்றுப் போக செய்து விடுகின்றன!


unmayaana varikal... ;) ;) ;) nice post