FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 21, 2019, 10:31:35 PM
-
வருபவர்கள் யாவரும்
தன்னந்தனியாக விட்டுப்போவதாக
புலம்பிக்கொண்டே இருக்கிறாய்,
இல்லை.
அவர்கள்
ஒவ்வொரு படியாக
ஒவ்வொரு புரிதலாக
ஒவ்வொரு மனத்திடமாக
கைத்தூக்கிவிட்டுப் போகிறார்கள்.
வந்தவேலை முடிந்தவர்களை
தங்கியிருக்கச் சொல்லுதல் அபத்தம்.
வழியனுப்பி வை!
-
மச்சான் செம்ம . வரிகள் வலியென்ற போதும்
உண்மையானது.
வாழ்த்துக்கள் மச்சான் உங்கள் கவிப்பயணம்
தொடரட்டும்.. 💐💐💐💐
-
வழியனுப்பி வைப்பதை தவிர சிறந்த அன்பு வேறொன்றுமில்லை. அருமை செழியன்