FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 02, 2019, 03:45:09 PM
-
முழுவதுமாக படிக்கவும்..
ஒரு பெண் பிறரை அதிகம் நேசிக்க துவங்கும் பொழுது அவள் பெண்மையை அடைகிறாள், தாய்மை அடையும் பொழுது பெண்மையில் முழுமை அடைகிறாள்...
இதில் பெண்மையை அடைதல், பெண்மையில் முழுமை பெறுதலை பற்றி சொல்ல விரும்புது, பெண் மக்களின் மனம் பக்குவ படுவதை தவிர வேறில்லை..
பெண் என்பவள் இயற்கையிலே பெண்மையில் படைக்கப்பட்டதால் தான் அவளை பெண் என்று அழைக்கிறோம், பிறகு என்ன பெண்மையை நிரூபிக்க தரம் தேவை படுகிறதோ?...
உலகில் அதிகம் நேசத்திற்குரியவளும், மதிப்பிற்குரியவளும் பெண்ணே...
உன் தாய் உன்னை சிரமத்துடனே பெற்றேடுதுதால், சிரமத்துடனே வளர்த்தெடுத்தால் அவளை (சீ) என்று கூட சொல்லி விடாதே என்கிறது இஸுலாம்...
தாயின் காலடியில் தான் சுவர்க்கம் என்கிறது ஏக இறைவனின் திருமறை ஆகிய (அல் குரான் )....
பெண்மையை காட்டிலும் ஆண்மையை பலமாக படைத்ததன் நோக்கம் பெண்மைக்கு பாதுகாவலாக இருப்பதற்கே, பெண்மையை தவறாக விமர்சிப்பதற்கு அல்ல...
உறவுகளே என் கருத்தில் எதும் தவறுகள் இருப்பின் படைத்தவனுக்காக என்னை மன்னிக்கவும்... நன்றி. MNA.....