FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on May 27, 2019, 03:15:59 AM

Title: நிமிட கோபத்தில்...
Post by: இளஞ்செழியன் on May 27, 2019, 03:15:59 AM
பாதங்களுக்கு கீழாக
பூமி நழுவத்துவங்குகையில் நிலைகுலைகிறேன்

அழுத்தங்கள் இன்னுமாய் சறுக்கலாகி
அடி இடறும் ஒரு புள்ளியில்
புலம்பல் நிறுத்தி

புலம்பல்களின் அதிர்வுகள் தாக்கிடாதவாறு
மௌனத்தின் போர்வைக்கொண்டு
என்னை போர்த்தி
அண்டத்தில் பேரமைதியாகிறேன்

என் கூச்சல்கள் எங்கோ
ரீங்காரமிட்டு மரித்துப் போகுமாகக் கடவது