FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on March 13, 2019, 07:14:23 PM

Title: ஒரு ஏக்கம
Post by: JasHaa on March 13, 2019, 07:14:23 PM
ஒரு அந்தகார  இரவினில்,
மனதினில் ஒரு ரீங்காரம்,
எங்கோ இசைத்த  குழலோசை,
உள்மனதினில்  இனம் புரியா ஒரு ஏக்கம்,
காலங்கள் உணர்த்தும் வலிகள்,
வழிகாட்ட  வருவானா வழிப்போக்கன்...
வாழ்வு முழுதும்  கைப்பற்றி  செல்வனோ -  இல்லை
காவியம் படைத்து வாவென வழிவிட்டு  போவானோ?