FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on March 13, 2019, 07:14:23 PM
-
ஒரு அந்தகார இரவினில்,
மனதினில் ஒரு ரீங்காரம்,
எங்கோ இசைத்த குழலோசை,
உள்மனதினில் இனம் புரியா ஒரு ஏக்கம்,
காலங்கள் உணர்த்தும் வலிகள்,
வழிகாட்ட வருவானா வழிப்போக்கன்...
வாழ்வு முழுதும் கைப்பற்றி செல்வனோ - இல்லை
காவியம் படைத்து வாவென வழிவிட்டு போவானோ?