FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 11, 2019, 03:09:50 PM
-
உயரங்கள்
பரவசமாயிருக்குமளவுக்கு
பாதுகாப்பாயில்லை
ஆழங்கள்
பத்திரமாயிருந்தாலும்
பயமாயிருக்கிறது.
சந்தோசமாயில்லையென்றாலும்
சமாதானமாக இருக்கிறது
அன்பு சமதளங்களில்.
-
அருமையான கவிதை நண்பா. sorry ஒரு பரிசோதனை முயற்சியாக முதல் நான்கு வரிகளை மட்டும் மாற்றி போட்டு பார்த்தேன்,
உயரங்கள்
பாதுகாப்பில்லையெனினும்
பரவசமாயிருக்கிறது
ஆழங்கள்
பயமாயிருப்பினும்
பத்திரமாயிருக்கிறது
எப்படி படிச்சாலும் அழகாயிருக்கு நண்பா :)