FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on January 30, 2019, 09:36:06 PM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: Forum on January 30, 2019, 09:36:06 PM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 08.02.2019  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: பொய்கை on January 31, 2019, 02:58:43 PM
மூன்றெழுத்து காதல் !

காதல் மூன்றெழுத்து - வாழ
பணம் மூன்றெழுத்து  வேணுமே!
உயிர் மூன்றெழுத்து - போனால்
பிணம் மூன்றெழுத்தாய் மாறுமே!
காதல் பிணமாய் மாறுமே !

காதல் மூன்றெழுத்து - வாழ
இனம் மூன்றெழுத்து வேணுமே!
குணம்  மூன்றெழுத்து - போனால்
ரணம் மூன்றெழுத்தாய் மாறுமே !
காதல் ரணமாய் மாறுமே !

காதல் மூன்றெழுத்து - வாழ
நிறம் மூன்றெழுத்து வேணுமே!
புறம் மூன்றெழுத்து - பேசி
சிரம் மூன்றெழுத்து தாளுமே!
காதல் சிரமும் தாளுமே !

காதல் மூன்றெழுத்து -வாழ
அன்பு மூன்றெழுத்து வேணுமே!
பண்பு மூன்றெழுத்து - குறைந்தால்
வம்பு மூன்றெழுத்து ஆகுமே
காதல் வம்பாய் ஆகுமே !

காதல் மூன்றெழுத்து -வாழ
தாகம்  மூன்றெழுத்து வேணுமே!
உறுதி  மூன்றெழுத்து  போனால்
இறுதி  மூன்றெழுத்து ஆகுமே
காதல் இறுதி ஆகுமே !

காதல் மூன்றெழுத்து
சாதல் மூன்றெழுத்து
காதலும் , சாதலும்
மனிதத்தின் தலையெழுத்து !   


Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: JeGaTisH on January 31, 2019, 05:03:20 PM
என்னில் உன்னை காண்பது காதல்
கனவு உலகில் என்னை
சிறகடிக்க வைத்தது காதல்  !

சின்ன சின்ன கோபத்தை கூட
என்னை ரசிக்க வைத்து காதல்!

என் கனவுகளை கொள்ளை அடிப்பவளும் காதல்
என் இரவுகளை பகலாக மாற்றுபவளும்  காதல்

இதயத்தை இரும்பு பெட்டிக்குல் அடைத்திருதேன்
அதை உருக்கி உள்ளே சென்றவள் யாரோ!

வசந்த மாளிகை கட்ட நினைத்தேன் காதலிக்காக
நீ வசிக்கும் வீடே எனக்கு மாளிகை  என்றது காதல்

தாஜ்மஹாலை கூட வாங்க நினைத்தேன் காதலிக்காக
தலையில் சூட பூ போது என்றது காதல்

பணம் பார்த்து வந்த காதல்
பணம் போல் சென்றுவிடும் 
உன் அன்பை எதிர் பார்க்கும் காதல்
உன்னுயிர் பிரிந்தாலும் உன்னுடன் வர துடிக்கும்!

காதலை ஏமாற்றாதே ! அது
உன்னை கலைறையில் புதைத்துவிடும்!
சந்தேகம் என்னும் தீயை வளரவிடாதே!
அது ஒருநாள் உன்னை பொசுக்கிவிடும்!

உண்மையான காதலர்கள் இருக்கும் வரை
காதல் சாகாது ...இனிய காதலர் தின நாள் வாழ்த்துக்கள். ;D
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: thamilan on February 01, 2019, 02:20:24 PM
ஜனன சூரியனின்
மறுபதிப்பாய் அவள் முகம்
மரணித்துப் போன என் மனதில்
மீண்டும் ஓர் உதயமாய் …..

என் இதய  சூரியன்
என்றோ  அஸ்தமித்து விட்டது
என்றாலும்
என்னுள் உறங்கி கொண்டிருக்கும்
அவள் நினைவு
உதய சூரியனே,,,,,,,,
உன்னைக்கண்டதும் அவ்வப்போது
துயில் எழும்

உதய சூரியனே - நீ
இருட்டைக் கழுவி துடைத்து விட்டாய்
அவள் முகம் போலவே அழகாகவே …..

ஆனால்
மாலைச் சூரியனாய்
அவள் இதயம் மட்டும்
இன்னும் மயங்கியே கிடக்கிறது

உயிர்களை துயில் எழுப்பிய நீ
அவள் இதயத்தை மட்டும்
என் திரை போட்டு
மறைத்து வைத்திருக்கிறாய்

பிரபஞ்சம் முழுவதும்
உன் ஜனனத்தால்  ஒளி பெற்றது
பிரபஞ்சமற்ற அவள் இதயம்  மட்டும் 
இன்னும் இருட்டாகவே இருக்கிறது

ஜனன சூரியனே
இருட்டுக்குள் தொலைந்து போன
அவள் இதயம்
விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என
காத்திருக்கிறேன் 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: சாக்ரடீஸ் on February 01, 2019, 06:39:17 PM
(https://i.postimg.cc/dkychbd3/kisspng-thanksgiving-gratitude-happiness-turkey-greeting-c-love.png) (https://postimg.cc/dkychbd3)

காதல்
அன்பின் முன்னுரை காதல்
காயங்களின் முடிவுரை காதல்
தூக்கத்தை தொலைப்பது காதல்
ஏக்கத்தை வளர்ப்பதும் காதல்
சுகமாய் வருவது காதல்
சுமையாய் போவதும் காதல்
கனவுகளை தருவது காதல்
நிஜத்தை  கலைப்பதும்  காதல்
சுகங்களை காலடியில் வைப்பது காதல்
ஒட்டுமொத்த வலியையும் உணர வைப்பதும்  காதல்
அறிவாளியாய் உணரவைப்பது காதல்
அறியா வலியை உணர்த்துவதும் காதல்
யோசிக்க வைப்பது காதல்
யோசனைகளை பொய்யாக போகச்செய்வதும் காதல்
உறவாய் உணரவைப்பது காதல்
தனிமையில் தவிக்க செய்வதும் காதல்

காதல்
நீ என்பது மாறி
நீயே காதலாகி போவாய்
காதல் கானல் நீராய் போகாமல்
நிஜமாவதும் 
நிழலாய் போவதும்
காதலர்களாகிய நாம்
எடுக்கும் முயற்சியிலே 
சாத்தியம்...


இனியவளே
என் இதயம் என்னும்
பூஞ்சோலையில்
அன்பு என்னும் தேனை மட்டும்
ருசிக்க வந்த
வண்ணத்துப்பூச்சி நீ ...

இனியவளே
முதலில்
நட்பாய் கை கொடுத்து 
பின்
காதலாய் கரம் பிடித்தவளே
என் சோகங்களை கரைத்தவளே
என் கண்ணீரையும்
தித்திக்க செய்தவள் நீ... 

இனியவளே
என் முகம் கண்டு
என் மனம் அறிவாய்
புயலாய் வரும்
என் கோபத்தையும்
சிறு புன்னகையில்
வென்றுடுபவள் நீ....

இனியவளே
உன் நேசத்தை
அளவுகோல் வைத்து
அளக்க தான் முடியுமா ?
நான் மட்டுமே
உன் உலகம் என்று
என்ன சுற்றி சுற்றி வரும்
உன் நேசத்திற்கு ஈடாய் எதை தருவது ?
உன் நேசத்துக்கு ஈடான
என் நேசத்தை தவிர... 

இனியவளே
உன் சின்னச்சிறு  கனவுகள்  நான் அறிவேன்
உன் சின்னச்சிறு  ஆசைகளை நான் அறிவேன்
உன் சின்னச்சிறு பயங்களை நான் அறிவேன்
உன் சின்னச்சிறு ரணங்களை  நான் அறிவேன் 
உன் கனவுகளை
நிறைவேற்ற  துணை நிற்பேன்
ரணங்களில்
உன் கண்களை
கடந்துவரும் கண்ணீரை
என் விரல் நுனியால்
அணை கட்டிடுவேன்...

இனியவளே
முகம் கண்டு வந்த நேசம்
முடிந்து போகும்
அகம் கண்டு வந்த நேசம்
காலம் தாண்டி
வாழ்ந்திடுமே ...
கண்கள் காணாமல் அகத்தை கண்டு
உணர்ச்சிகளை காணாமல் உணர்வை புரிந்துகொண்டு
நாம் கடந்து வந்த நம் நேசம்
உன் கண்களை கண்டு வீழ்ந்து போகுமோ?
உணர்ச்சிகளை கண்டு உணர்வு இழந்திடுவோமோ ?
இல்லை இல்லை
நேரில் கண்டால் கூட
வரம்பை மீறாது நம் நேசம்...
அந்த நாள் வெகு விரைவில் வர
நாம் இருவரும்
காத்திருப்போம்......

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்....

(https://i.postimg.cc/dhjXD80b/kisspng-logo-brand-pink-m-font-cute-tag-5b46b8034c8569-108192581.png) (https://postimg.cc/dhjXD80b)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: MysteRy on February 02, 2019, 02:18:50 PM
காதலர் தினம்
அது காதலர்களுக்கு
காதலை சொல்லும் தினம்
இது எதற்கு
காதலை நினைவுபடுத்தவும்
ஒரு நாள் வேண்டுமா

காதல் என்ன வருடம் ஒரு முறை வரும்
தீபாவளியா என்ன
காதல் ஒரு உணர்ச்சி 
நம் உணர்ச்சிகளுடன்
ஒன்றக்கலந்த  ஒரு உணர்வு

காதலர் தினம்
நம் காதலை சொல்லும் தினம்
வாழ்த்து அட்டைகள் பரிசு பொருட்கள்  ரோஜாப்பூ
என நம் காதலை பரிமாறிக்கொள்ளும் தினம்

கிறிஸ்து சொன்னார்
எல்லோரையும் அன்பு செய்யுங்கள்  என்று
காதல் அன்பின் ஒரு பரிமாணம்
அன்பு தன்னலமற்றது
எதையும் எதிர்பார்க்காதது   
காதல்  சுயநலமிக்கது
எதிர்பார்ப்புகள் கொண்டது

எல்லோரையும் அன்பு செய்யுங்கள்
எல்லோருடனும் கிறிஸ்து சொன்னது போல
அன்பாக இருங்கள்
காதலில் உண்மையாய் இருங்கள்
உறுதியாய் இருங்கள்




(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2F2019%2FLOVE%2FVALENTINE.jpg&hash=956b2d06d377e6e85b01f9c521011ad660bce700)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: JasHaa on February 02, 2019, 10:06:41 PM
                                   காதலர்  தினம்

பனித்துளி படர்ந்த ரோஜாக்களின் கூட்டம்
காதலர்களின் தேசிய மலர்...

விண்ணில் பறந்து தூதுபோகும் புறா
காதலர்களின் தேசிய உயிர்...

நிழல் தரும் விருட்சம் யாவும்
காதலர்களின் தேசிய மரம்...

இன்பசாய்ப்பண்டம் மொத்தமும்
காதலர்களின் தேசிய  அமிழ்து...

காதல் சொட்டும் வாழ்த்துமடல்கள்
காதலர்களின் தேசிய மடல்...

தேன் சொட்டும் இதழ் தீண்டும் அதரங்கள்
காதலர்களின் தேசிய சின்னம்

சிலிர்ப்பூட்டும் உப்புக்காற்று 
காதலர்களின் தேசிய சுவாசம் 

செல்லமாய்  சிணுங்கி  சீண்டும் ஊடல்
காதலர்களின் தேசிய விளையாட்டு 

பள்ளங்களும்,மேடுகளும்,வேகத்தடைகளும் 
காதலர்களின் தேசிய உடமை 

வடதுருவமோ தென்துருவமோ
கண்டங்கள் மாறினாலும் 
தேசங்கள்  கடந்தாலும் 
இவையாவும்  பொதுவுடைமையை  !!!

காதலர் தின  வாழ்த்துக்கள்



(https://i.postimg.cc/Lnv6y4p0/download-2.jpg) (https://postimg.cc/Lnv6y4p0)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: joker on February 06, 2019, 05:22:24 PM
       Nandri
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: RishiKa on February 08, 2019, 09:07:09 AM

அன்புள்ள காதலுக்கு !
நீ எனக்குள் வந்த பிறகு   ...
முளைத்தது புதிய சிறகு ....

காலையில் கோலம் போட மறந்தேன் !
இருமுறை துளசிக்கு நீர் விட்டேன் !
சாம்பாரில் சக்கரையை போட்டேன் !
காபியில் உப்பை கொட்டினேன் !

இதழில் புன்னகை ஒட்டிக்கொண்டன !
இமைகளில் வெட்கம் கட்டிக்கொண்டன !
வார்த்தை வரங்களை யோசிக்கின்றன ! !
மௌனங்கள் விரதங்கள் யாசிக்கின்றன !

அம்மா வினோதமாக பார்த்தாள் !
தோழிகள் வித்தியாசத்தை வினவினர் !
இதயத்தில் சிறு வலி கண்டேன் !
உடலில் மின்சாரம் உணர்ந்தேன் !


பாதங்கள் பூமியில் பதியவில்லை !
பாதைகள் விழிகளுக்கு புலப்படவில்லை !
சாலையில் பச்சை விளக்குக்கு பதுங்கினேன் !
பாதசாரிகளை வேகத்தில பயமுறுத்தினேன் !

தியானத்தில்  நிர்மல முகம் கண்டேன் !
கோவில் மணியோசையில் குரல் கேட்டேன் !
உச்சரிக்கும் மந்தரம் ஆனது பெயர் !
தூக்கத்தை மறந்தது எனது உயிர் !

காதலை  என்ன செய்வதாய் உத்தேசம் ?
கனவுபயிர்களை கருக விடுவாயோ ?
வினாக்களுக்கு விடை கொடுப்பாயா ?
அல்லது எனக்கே விடை கொடுப்பாயா ?

அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் !




Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: SweeTie on February 08, 2019, 10:43:44 AM
எட்டுப்போல் இடுப்பழகி - நான்
எறும்பு போல் சிவப்பழகி
செங்கரும்பு   சொல்லழகி
 நீ  தினம் போற்றும்    தமிழழகி

காதலுக்கு பொருள் சொன்னாய்
சாதலுக்குள்  அடங்கும்  என்றாய்
மோதலுக்கு வந்தவனே
போதையில்  நீ மயங்கினையோ?

நிலவென்றாய் நதியென்றாய்
நிலம் பார்க்கும் பெண்ணென்றாய்
தேனென்றாய்  தெளிவென்றாய்
தென்னாட்டு  தேரென்றாய்

தீராத  நோய்  என்றாய்
தெவிட்டாத   தேன்  என்றேன்
தீக்கிரையாகி  நின்றாய்
தண்ணொளி வீசி நின்றேன்

ஈருயிர் ஓருடலாய்  இணைந்தாய் 
பாலுடன் தேனாய் கலந்தாய் 
பேதை என் கண்ணில் நுழைந்தாய்
கரு விழிகளில் என்றும் நிறைந்தாய் .


 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: SaMYuKTha on February 08, 2019, 01:26:11 PM
காதலை தேர்ந்தெடுக்கையில்
கவனமாக தேர்ந்தெடுத்தால்
காதல் பலமாகுமென
சொல்லித்தருகிறார்கள்..

தேர்ந்தெடுப்பதெல்லாம்
காதலில்லை
நிஜமான காதல்
உன்னை தேர்ந்தெடுக்கும்

இளவயது இனக்கவர்ச்சிகளையும்
எனக்கும் ஒரு காதல் வேண்டுமே
என்று ஏங்கித் தேடிய ஈர்ப்பையும்
காதல் என்று புரிந்தால் பிழையே..

நிஜமான காதல்
நம்மைத் தேர்ந்தெடுக்கையில்
உணர்ந்தறிய தயாராய்
இருந்தால் போதும்

நிஜமெனில் காதல்
உன்னை உனக்கு
அடையாளம் காட்டும்..
உனது சிறப்புகளை
தனித்தன்மைகளை
உனக்கே வெளிச்சமிடும்..

வலிகளை தாண்டி
உனக்கான வழிகளை
போதிக்கும்
உனக்கு வேண்டியவர்களை
நேசிக்கும்
உனது உறவுகளை
தனது உறவாக கொள்ளும்

அது உன்னை அடைதலால்
உனக்கு இழப்புகள் ஏற்படுமெனில்
உன்னை விட்டகலவே நாடும்..

உன் சிரிப்புகளுக்காய்
என்ன செய்வது என
சதா யோசிக்கும்..

உனக்காக அழும்..
ஆனால் அதன் சிரிப்பிற்கு
விலையாய் உன்
சிரிப்புகளை கேட்டிடாது..

உனக்குள் இருக்கும்
தணலை அணைந்திடாமல்
ஊதி நிற்கும்

உன் நலத்தை
தன்னலமாய் கொள்வதில்
நிஜ காதல்கள்
சுயநலமானவை

காதலென்பது உனக்கான
விட்டுக்கொடுத்தல்களில்
மகிழ்ச்சிக்கொள்ளும்
முதிர்ந்த நிலை...

உனக்கான நலத்தில்
ஆசைக்கொள்ளும் பேராசை
உன் மகிழ்வில்
மகிழ்வடைந்து திருப்திக்கொள்ளும்..

அங்ஙனம் ஒரு காதல் அமைந்தும்
எதோ காரணங்களால்
விட்டகல நேர்கையில்
உனக்கான இடைவெளி தந்து
நயமாய் நகர்ந்து நிற்கும்

கண்ணீர் மறைத்து
உனக்காய் உறுத்தாமல்
நியாயம் பேசும்

எல்லாம் தாண்டி
'உனக்கெப்படி மனம் வந்தது?'
என கேள்விகளால்
மானசீக நெருக்கடிகளில்
உன்னை உள்நுழைக்காது
நீ செய்வதே சரி
என உனக்காக வாதாடும்

அப்படி ஒரு காதலை
வாழ்க்கை காட்டுகையில்
இருகரம் நீட்டி ஏந்திக்கொள்

முடியாத நிலையெனில்
நீ தொலைப்பது
உன் வாழ்க்கைக்கான
ஒரு உண்மை காதலை..
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2019)
Post by: RowdY on February 08, 2019, 07:05:07 PM
உணர்வுகளை விதைத்ததும் காதலே
உள்ளத்தை சிதைத்ததும் காதலே

கடிந்துரைக்கச் செய்ததும் காதலே
கவியுரைக்கச் செய்ததும் காதலே

சிறகடிக்கச் செய்ததும் காதலே
மனச்சிறையில் பூட்டியதும் காதலே

மின்மினியாக  மிளிர்ந்ததும் காதலே
கானலாக மறைந்ததும் காதலே

ஏற்றம் தந்ததும் காதலே
ஏமாற்றம் தந்ததும் காதலே

சிந்திக்க வைத்ததும் காதலே
சிதறடித்ததும் காதலே

வளரச் செய்ததும் காதலே
மனம் தளரச் செய்ததும் காதலே   

காதலே உனக்குத்தான் எத்தனை  வலிமை
காதல்வழி செல்லும் மனம் காதல்வலி
ஏற்கும் வல்லமை தாராயோ காதலே!