புத்தனின் புன்னகை
(https://i.postimg.cc/yxVkBsrV/images-1.jpg) (https://postimages.org/)
எல்லாவற்றையும் துறந்து
தனியே பயணிக்கவென
முடிவெடுத்து
தெருவில் கால் பதித்த
புத்தனுக்கு
முன்னறிமுகமற்றவர் சிறு
புன்னகையை வீசி செல்கிறார்
கண்களில் தாங்கி நிற்கும்
ஒவ்வொரு கணமும் கனம் கூடிப்போன
அப்புன்னகையை
எந்த பக்கம் துறந்து செல்வதென்ற பெருங்குழப்பத்தின் முடிவில்
துறக்கவியலா அப்புன்னகையை
தானே ஏந்தி நிற்கிறான்
Image Source: Google