FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 04, 2018, 03:28:48 PM
-
நாம் அழுக்காய் நினைக்கும்
நிறைய இதயங்கள்
அழகானவையாய் இருக்கலாம்..!!
.
நாம் அழகாய் நினைக்கும்
நிறைய இதயங்கள்
அழுக்கானவையாக இருக்கலாம்...!!
.
விதைத்தலின் மொழியில்
பிழைத்துவிடுகையில்
அழுக்கையே அறுவடை
செய்கிறோம்....
.
சினத்தின் மீதேறி
சவாரி செய்தலால்
வழியெங்கும் வேகத்தடைகளில்
விழுந்தழெுந்து மீண்டும்
விழுகிறேன்....
.
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
வேகத்தில் சிக்கி
சின்னாபின்னமாகிறது
சுயம்....
.
வேகம் குறை...
விவேகம் நிறை....
கோபம் அறு....
அன்பை மிகை...
-
செய்யனும் :) செய்ய வேண்டும் :)
-
சினத்தின் மீதேறி
சவாரி செய்தலால்
வழியெங்கும் வேகத்தடைகளில்
விழுந்தழெுந்து மீண்டும்
விழுகிறேன்....
.
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
வேகத்தில் சிக்கி
சின்னாபின்னமாகிறது
சுயம்....
.
வேகம் குறை...
விவேகம் நிறை....
கோபம் அறு....
அன்பை மிகை...
machi intha lines nijama sema ..... arumaiii dokku machi :-* lochakkk
-
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
சுயநலம் இல்லா நட்பில்
அன்பு விதைக்கப்படும்
[/color]