FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on November 29, 2018, 08:39:50 AM

Title: 'அவசரம்' பழகுதல்
Post by: Guest 2k on November 29, 2018, 08:39:50 AM

'அவசரம்' பழகுதல்

ஒரு அவசர உதவிக்காக
உங்கள் தொலைபேசிக்கு அழைக்கிறேன்.
நீங்கள்,
பாத்திரத்தில் இருக்கும் கடைசி சோற்றை
தெரு நாய்க்கு வழித்துபோட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்,
எதிர் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் டெயிலரை பற்றி
மிக அக்கறையாக வேலைக்காரியிடம் விசாரித்துக்கொண்டிருக்கின்றீர்கள்,
உள்ளீட்டுக் கருவியில் இரண்டு இரண்டு வரிகளில்
கவிதை எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்,
மானாட மயிலாட பார்த்துக்கொண்டே
குழந்தையின் மூக்கில் சோற்றை திணிக்கின்றீர்கள்,
ஈஸி சேரில் காலை ஆட்டிக்கொண்டே
கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்,
இன்று இரவு தீர்ந்துவிடக்கூடிய வங்கி கணக்கை
உற்று பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்,
பாத்ரூமில் குத்துக்காலிட்டு
கறைபடிந்த துணியோடு போராடிக்கொண்டிருக்கின்றீர்கள்
டிஸ்கவரி சானலில் முதலைகளின் கலவியை பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்
அல்லது நீங்களும் கலவி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்.
சரி உங்களுக்கென்ன அவசரமோ !
Title: Re: 'அவசரம்' பழகுதல்
Post by: Guest on November 29, 2018, 11:00:11 AM
 அட.....  nice....
Title: Re: 'அவசரம்' பழகுதல்
Post by: பொய்கை on November 29, 2018, 11:41:02 AM
மதுரை மண்ணில் இருந்தால் , தமிழ் மனம் தானாய் வரும்போலவே .... சிக்கு அருமை...
Title: Re: 'அவசரம்' பழகுதல்
Post by: Guest 2k on November 29, 2018, 11:48:06 AM
Dokku கிட்ட ஒரு 'அட' வாங்கிறது, வாவ்வ் இந்த நாள் இனிய நாள்😁

பொய்கை எல்லாம் உங்களை மாதிரி கவிஞர்கள்கிட்ட கத்துகிடுறது தான் 😁
Title: Re: 'அவசரம்' பழகுதல்
Post by: SweeTie on November 29, 2018, 06:38:16 PM
யார் மீது கொண்ட கோபம்.   இப்பிடி சீறிப்பாய்கிறீர்கள் ? கவிதையில்   ஆபாச வரிகள்  இல்லாமல் இருந்தால் கவிதை நன்றாக இருந்திருக்கும்
 
Title: Re: 'அவசரம்' பழகுதல்
Post by: Guest 2k on November 29, 2018, 08:52:11 PM
ஜோ சிஸ் யார் மீதும் கோவப்பட நமக்கு உரிமையில்லை. இது பொதுவாக மற்றவர் மீது எளிதில் கல்லெறிபவர்கள் பற்றிய கோபம் தான். அடுத்தமுறை இதுபோன்ற வார்த்தைகள் இல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன். நன்றி சிஸ் :)