FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 21, 2018, 08:31:42 PM
-
பிரிவு
வாழ்க்கையில்
விரும்பாவிடினும் வரும் ஒரு
நிகழ்வு
வாலிபனானதும் பிரிகிறோம்
நம் குழந்தை பருவத்தை
கல்லூரிக்கு சென்றதும்
பிரிகிறோம்
நம் பள்ளிநாட்களை
வேலைக்கு சென்றதும்
பிரிக்கிறோம்
நம் கல்லூரி நாட்களை
கல்யாணம் ஆனதும்
பிரிகிறோம்
சில நட்பு வட்டத்தை
வயோதிகரானதும்
பிரிகிறோம்
நம் வாலிப பருவத்தை
பிரிவு
ஒரு நல்ல அத்தியாயத்தின்
தொடக்கம் எனில்
பிரிவை
நேசிப்போம்
THANKS TO ALL FTC FRIENDS
GOD BLESS YOU ;)
-
Pirivu Santhippai Suvaiyanathaakum.
Antha suvaiyana tharunathai Ethir parthirupom.
-
ஏனோ காரணம் புரியவில்லை நானோ நீயோ தெரியவில்லை