ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 200
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM+UYIRAAGIRATHU%2F200.png&hash=82cec1141af3d3d7e205ff04f88ae6b41f83a9cf)
இருநூறாவது ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை முன்னிட்டு மேல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் பதிவிடப்படும் அனைத்து கவிதைகளும் நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
எங்கிருந்து வந்தவளோ நீ ??
உன்னை பார்த்த முதல் நிமிடத்தில் பட படத்தது
என் இதயம்!!!
என் இதயம் பட படத்த சத்தம் கேட்டு
நான் உணர்ந்தேன்
என் உள் வந்த காதலை.....
நான் அவளை பார்க்கையில்
அவள் எனை
பார்த்ததையும் நான் பார்த்தேன்....
எங்கிருந்து வந்தாளோ பேசுவாளோ மாட்டாளோ
என்று ஆயிரம் கேள்விகள் என் உள்ளே.......
எத்தனை கேள்வி வந்தாலும் உன்
ஆசையை சொல் என்றது என் இதயம்..........
மறுநாள் தயக்கத்தை விட்டு
பேச துணிந்தேன் நான்....
எனக்கு காலம் முழுவதும் உன் அன்பு வேண்டும்
கொடுப்பாயா என்றேன்!!!
உடனே அவள்
நீ கொடு நான் கொடுக்கிறேன் என்றாள்!!!!!!
என் இதயத்தில் ஆயிரம் வயலின் இசை
சத்தம் கேட்டு
சொல்ல முடியாத சந்தோசம் என் உள்ளே
எங்கிருந்து வந்தாயோ நீ.... ஆனால் நீ
எனக்காக பிறந்தவள் என்று சொன்னது என் இதயம்
நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரம் சந்தோசம்
கொடுத்தவள் நீயடி
உன் கூட பேசிக்கொண்டு நீ தூங்குகையில்
உன் மூச்சு சத்தத்தை
ரசித்தவன் நானடி
ஆனால் இப்போ
சிறு சண்டைகள் பெரு சண்டைகளாகி
நாளுக்கு நாள் கொல்லாமல் கொல்லுதடி
உன் நினைவு
இதன் முடிவு தான் என்ன????
மறுபடி வருவாயா?????
ஆயிரம் கேள்விகளுடன்
உன் மூச்சு சத்தத்தை நினைத்திட்டே
தனிமையில் நான் ...........
200vathu oviyam uyiragirathu nu
ellarum eluthurankannu naanum eluthinan
jaarum thittatheenka :)
vazhthukkal FTC oviyam uyiragirathu team
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl1.jpg&hash=328472873df2d9b971f33514793672d0a50edc16)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl2.jpg&hash=ca6e4a74073f0462ffeb8602df15c3c69f56e26b)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl3.jpg&hash=84260f6b5d56229816de6cae43e2f6b14d82ecad)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl4.jpg&hash=c98f30ed704b9509df4f58a6d5141b904f2cca1a)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl5.jpg&hash=c7d5fc829c9002019cb783ac775d3eaf0790e33a)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fznewfiles%2Fall%2Fdonglee%2Fdl6.jpg&hash=abf365dc93a9dbffaafc6dc3110f1c1152f4f112)