FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 27, 2018, 04:18:58 AM

Title: கோர்த்துக்கொண்டிருக்கிறேன்...
Post by: Guest on August 27, 2018, 04:18:58 AM
படித்த கவிதைகளின்
வார்த்தைகளை
கடமெடுத்து நானே
புனைந்துகொண்டேன்
புதியதோர் பதியம்

கவிதை எனச்சொல்லி
வீதியில் வீசி எறிந்தேன்

சிலதை வாசித்தனர் - அதில்
சிலதை நேசித்தனர்

இன்னும் சிலதை
அங்கேயே அநாதையாய்
விட்டுச்சென்றனர்...

நான் பொறுக்கி
எடுத்து கோர்த்துக்கொண்டிருக்கிறேன்...