படித்தேன் கவிதைகள் பல
புரிந்தன அதில் சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத கொண்டேன் எண்ணம்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன் என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால் என்ன உருவாக்கலாம் என்று
செய்தேன் முயற்சி
கொஞ்சம் வளர்ச்சி
தொடங்கினேன் கிறுக்கினேன்
கோர்வையாய் செதுக்கினேன்
இது கவியா இலக்கண பிழையா?!