FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 10, 2012, 10:51:16 PM

Title: ஏடில்லை எழுத... பாடிய வரிகள் உண்டு...
Post by: Jawa on March 10, 2012, 10:51:16 PM
ஏடில்லை எழுதவென்று
ஏங்கித்தவித்த எங்களுக்கு
ஏடாகி வந்த எழுத்தே
வரைகின்றோம் பல கவிதை
உந்தன் வலையில்தான்
காற்றோடு கலக்கும் எண்ணங்களை
எழுத்தோடு கலக்கின்றோம்
நெகிழ்வாய் வரும் பாராட்டு
மெதுவாய் குட்டிச்செல்லும் விமர்சனம்
இன்னுமின்னும் எழுதத் தூண்டும்
மதிப்பெண் இடும் கைகள்
வளர்கின்றோம் உன்னாலே
வளர்ப்போம் உன்னையும்
எங்கள் இன்பத் தமிழையும்
தமிழால் சிறந்து தமிழால் உயர்வோம்
எழுச்சிமிகு தமிழராக வாழ்வோம்..!!
Title: Re: ஏடில்லை எழுத... பாடிய வரிகள் உண்டு...
Post by: Global Angel on March 11, 2012, 09:16:36 PM
உண்மைதான் இதெல்லாம் இல்லை என்றால் எது எங்கள் படைப்பு
Title: Re: ஏடில்லை எழுத... பாடிய வரிகள் உண்டு...
Post by: Jawa on March 11, 2012, 09:28:58 PM
Thank u........
Title: Re: ஏடில்லை எழுத... பாடிய வரிகள் உண்டு...
Post by: suthar on March 12, 2012, 02:41:15 PM
jawa nala present pani iruka
unga ellarudaiya varigalai  pakum pothu enoda
ezhuthu romba kammiya iruku
inum valaranum pola.....muyarchi panuvom..