FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 10, 2012, 04:42:04 PM
-
படித்ததில் பிடித்தது!
உன்வயதை வீணானவைகளைக்கொண்டு
பாழாக்கிவிடாதே!
உன் பருவம் போனால் திரும்பாது-அது
போகும்முன் புடம்போட்டு வைத்துக்கொள்.
நீ வாலிபத்தில் செய்யும் ஒவ்வொன்றும்
உன் வயோதிகத்தில் உனக்கே திருப்பிவரும்
திரும்பவரும்
வாலிபத்தை வேண்டாத சகவாசத்தினாலும்
வசதியான வாழ்வின் திமிரினாலும்
வீணடித்துவிடாதே!
வாலிபம் உனக்கு கொடுக்கப்பட்டதே
உன்னை சோதித்துப்பார்க்கத்தான்
அதில் நீ எடுத்துவைக்கும் ஒவ்வொருஅடியும்
உன் ஈரூலக வாழ்வையும்
தீர்மானிக்கப்படக்கூடியவைகள்
”ஆதலால் வாலிபமே”
வாலிபவயதின் வாழ்வை
முறையாக்கிக்கொள் அதுவே உன்னை
நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்