FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 02, 2018, 07:14:35 PM
-
நன்றி
-
அறியாமையில் வளர்ந்த சமூகம் அன்று
அறிவில் உயர்ந்துள்ள சமூகம் இன்று
ஆண்மலடு தெரியாத மனிதன் அன்று
பெண்களுக்கே உரிததென வசை பாடினான்
விஞ்ஞான வளர்ச்சியில் மலடு மறைந்து
பரிசோதனை குழாய்களில் உருப்பெறும் குழந்தைகள்
தேவை இருப்பின் குழந்தைகள் பெறலாம்
என்பதை பறைசாற்றும் உலகமிது
அன்று ஊர்வாயில் உலாவிய வார்த்தை
இன்று கூகிளில் கூட இல்லாமல் போனதுவே
கவிதை நன்று. வாழ்த்துக்கள்
-
நன்றி உங்கள் பதிவுக்கு
மறையவில்லை இன்னும்
இன்றும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
அந்த வார்த்தை
கூகுளை சென்றடையாத மாந்தர்கள் இன்னும் உண்டு
இப்புவியில்