FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 09, 2017, 10:42:54 PM

Title: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: thamilan on December 09, 2017, 10:42:54 PM
என் வீட்டுக்கு
எதிர் வீட்டில்
ஒரு வானவில் வந்திறங்கியது
எங்கள் தெருவே மின்னலடித்தது
தென்றல் வீசியது போல
தெருவே குளிர்ந்தது

பிரமன் தன்னிடம் மிஞ்சி இருந்த
அழகை எல்லாம் ஒன்று திரட்டி
கலவையாக்கி வடித்திட்ட
ஒரு அழகு தேவதை

தென்றல் அவள் பெயர்
அவளை பார்க்கும் போது
குளிர்கால தென்றலாக குளிர்ந்தது

ஜோவை விட அழகிய நடை
மாஷாவை விட குறுகிய இடை
CUTE MOONஐ  விட குறைந்த எடை
வித்யாவை விட நீண்ட ஜடை

இதனை பேரையும்
ஒன்று திரட்டினால் போல
ஒரு பேரழகு

கண்டதுமே மனதுக்குள்
காதல் கீதங்கள் இசக்காத் தொடங்கின
மனதுக்குள் பட்டாம்பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன
எனக்குப் பிறந்தவளை
எம்கண்களுக்கு காட்டிவிட்டான் இறைவன்
என ஆனந்தக் கும்மாளமிட்டது மனது

வழியப் போய் அவள்
தாத்தாவுக்கும் மாமாவுக்கும்
நண்பன் ஆனேன்
தம்பிக்கு தண்டப்பணம்
கொடுக்க ஆரம்பித்தேன்

எடுத்தேன் ஒரு காகிதத்தை
அடைத்தேன் எனது காதல் உணர்வுகளை
ஒரு பேனைக்குள்
வடித்தேன் ஒரு காதல் கடிதம்
கொடுத்தேன் அதை அவள்
தம்பி மூலம் ஒரு பூவுடன்

நாட்கள் சென்றன
பதிலைக் காணவில்லை
தம்பியும் காணவில்லை
யோசனையுடன் நடந்த நான்
கால் தடுக்கி விழப்போனேன்
காரணம் ஒரு பூ

ஓ பெண்ணே
நான் கொடுத்து
நீ கசக்கி வீசியதால்
கல்லாகிப் போனதந்தப் பூ
Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: thamilan on December 09, 2017, 10:48:14 PM
என் வீட்டுக்கு
எதிர் வீட்டில்
ஒரு வானவில் வந்திறங்கியது
எங்கள் தெருவே மின்னலடித்தது
தென்றல் வீசியது போல
தெருவே குளிர்ந்தது

பிரமன் தன்னிடம் மிஞ்சி இருந்த
அழகை எல்லாம் ஒன்று திரட்டி
கலவையாக்கி வடித்திட்ட
ஒரு அழகு தேவதை

தென்றல் அவள் பெயர்
அவளை பார்க்கும் போது
குளிர்கால தென்றலாக குளிர்ந்தது

JOவை விட அழகிய நடை
MASHAவை விட குறுகிய இடை
CUTE MOONஐ விட குறைந்த எடை
VIDHYAவை விட நீண்ட ஜடை

இதனை பேரையும்
ஒன்று திரட்டினால் போல
ஒரு பேரழகு

கண்டதுமே மனதுக்குள்
காதல் கீதங்கள் இசக்காத் தொடங்கின
மனதுக்குள் பட்டாம்பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன
எனக்குப் பிறந்தவளை
எம்கண்களுக்கு காட்டிவிட்டான் இறைவன்
என ஆனந்தக் கும்மாளமிட்டது மனது

வழியப் போய் அவள்
தாத்தாவுக்கும் மாமாவுக்கும்
நண்பன் ஆனேன்
தம்பிக்கு தண்டப்பணம்
கொடுக்க ஆரம்பித்தேன்

எடுத்தேன் ஒரு காகிதத்தை
அடைத்தேன் எனது காதல் உணர்வுகளை
ஒரு பேனைக்குள்
வடித்தேன் ஒரு காதல் கடிதம்
கொடுத்தேன் அதை அவள்
தம்பி மூலம் ஒரு பூவுடன்

நாட்கள் சென்றன
பதிலைக் காணவில்லை
தம்பியும் காணவில்லை
யோசனையுடன் நடந்த நான்
கால் தடுக்கி விழப்போனேன்
காரணம் ஒரு பூ

ஓ பெண்ணே
நான் கொடுத்து
நீ கசக்கி வீசியதால்
கல்லாகிப் போனதந்தப் பூ
Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: MaSha on December 09, 2017, 11:05:11 PM
Thamilannnnnn  ;D
intha kavithaiyila vaara characters ellam engaiyo kelvi patta polaiye irukke  :D :D :D
Yaar antha thenral?  ??? Poo than paavam... :(
Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: thamilan on December 09, 2017, 11:08:45 PM
masha elam ena valkil vesina thenral thaan. poo mattum thaan pavama naan illaya
Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: MaSha on December 09, 2017, 11:11:56 PM
unga valkaiyila veesina thenral a...? apo antha maama thaata ellam? hahha LOL!
sari sari neengalum koncham paavam than...  :P
Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: SweeTie on December 15, 2017, 01:28:45 AM
ஜோவை விட அழகிய நடை
மாஷாவை விட குறுகிய இடை
கிடே மூனை விட குறைந்த எடை
வித்யாவை விட நீண்ட ஜடை

இத்தனையும்  ஒருங்கே கொண்ட அந்த  சாம்பார்  பெண் 
உங்கள்  இதயத்தில் புகுந்ததை  எண்ணி எண்ணி     இந்த பெண்கள்
உங்களை  விட்டு வைப்பார்கள்  என்று  எதிர்பார்க்காதீர்கள்  தமிழன் .
உங்கள் ரசனையோ  ரசனை

Title: Re: கல்லாகிப் போனதந்தப் பூ
Post by: joker on December 16, 2017, 05:43:48 PM
தமிழா

நடை
இடை
எடை
ஜடை

பார்த்த நேரம் கடை
பார்த்து ஒரு அசல் "பூ"
வாங்கி தந்திருந்தால்

உன் காதல் இப்படி
அடைபட்டிருக்காது
பூவாய் காகித "பூவாய்"

மாறாக வீசியிருக்கும்
உன் வாழ்வில்
"தென்றல்" "பூந்தென்றல"


கவிதை அருமை வாழ்த்துக்கள்  :D :D :D