ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 163
இந்த களத்தின்இந்த நிழல் படம் Ftc Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM+UYIRAAGIRATHU%2F163.png&hash=555b577692300f31cfce9c822f75ee39a26873e9)
காசிநகர் புலவர்
பேசும் உறைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவிசெய்வோம்
கனவு கண்டான்
என் முண்டாசு கவி
நடந்தாகிவிட்டது ....!
தினம் செய்தித்தாள்
போட்டவன் பெயர்
வராத செய்தித்தாளே
இல்லாத நாளுமில்லையென
வாழ்ந்த கலாமின்
கனவு நோக்கியே
பயணப்படுகிறோம்
நிறைவேறுமா .....?
அறம்மறந்து
ஆட்சி செய்வோன்
சூழ்ச்சியில்
சுற்றிவளைக்குமோர் அரசு ....!
மெத்த கற்றவன்
தொழில் நுட்ப வளர்ச்சி
பெருமை பேசி
சுத்தம் கண்டு
தனித்து சுக வாழ்வு தேடும் சிலர் ....!
அதே மண்ணில்
இன்னலிடர்பட்டு
உழைத்து களைத்து
தெருவிலுறங்கி
வாழ்வை தேடும்
விட்டில் பூச்சிகளாய் பலர் ...!
கால மாற்றம் கானும்நேரம்
பகலவன் கண்டாலும் பகையே
வர்ணனை கண்டாலும் பயமே
அள்ளி கொடுக்கிறாள் இயற்கையன்னை
ஏற்க முடியா சிந்தனையற்ற சீர்கேடு....!
வினையை விதைத்தவனே
அறுக்க திண்டாட
மற்ற ஜீவராசிகளின் நிலை
சொல்லித்தான் தெரியனுமா...,
அடித்த கொட்டம் போதும்
அடுத்த தலைமுறைக்கு வழிவிடு
அறம்கற்று அவ்ர்கள் காப்பார்கள்
இயற்கையையும்
இதர ஜீவராசிகளையும்
கலாமின் கனவு மெய்படுமொருநாள் ....!