FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 29, 2012, 06:55:07 PM

Title: புரியாமல் நாடகம் ஏன்??
Post by: ஸ்ருதி on February 29, 2012, 06:55:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa1.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2Fs320x320%2F399846_116345348490746_100003458451929_45942_1119091282_n.jpg&hash=8cb9b8d70f962e278872e905e836d2a6916711c0)

நேசிப்பை அறியாதவரை
துள்ளி திரிந்த மனம்
உன் நேசத்தை அறிந்தபின்
துவண்டு போகிறது...

முழுதாய் தராமால்
ஏன் இந்த மாயஜாலம்...
உன்னோடு மட்டுமே
நாள் முழுக்க பேச ஆசையோடு
அனுதினமும் உன்னை தேட
கண்டும் காணமல் நீ...

சிலவார்த்தைகளை மட்டுமே
உதிர்க்கிறாய்...
உதிர்த்த வார்த்தைக்கு ஓராயிரம்
அர்த்தங்களை புரிந்து
மனம் குழப்பத்தில்...

பொறுமை இருந்த என் மனதில்
இன்று ஏனோ பொறாமை குடிக்கொள்ள
உன் மீது வீணான கோபம் கொண்டு
தள்ளி செல்ல  நினைக்கின்றேன்...

என்றோ நீ அனுப்பிய
குறுஞ் செய்தி எல்லாம்
கண்ணீரை வரவைக்க
கண்ணீரோடு படித்துவருகிறேன்....

உன் பிரிவு
என் கண்களில் கண்ணீர்
உன் முகத்தில் புன்னகையோ??

நீயாக ஒரு செய்தி அனுப்பிவிடு
தேடும் மனதை ஆறுதல் படுத்திவிடு...
கொஞ்சும் குழந்தையாய்
ஏங்கும் என் மனதின்
ஏக்கத்தை புரிந்தும்
புரியாமல் நாடகம் ஏன்??

தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருகிறாய்
என் இதயத்தின் துடிப்பாய்
நினைவுகளாய் அருகில் இருந்து
அழவைக்கிறாய்
கண்ணுக்குள்  கண்ணீராய்... ;) ;)


Title: Re: புரியாமல் நாடகம் ஏன்??
Post by: Dharshini on February 29, 2012, 07:08:10 PM
நேசிப்பை அறியாதவரை
துள்ளி திரிந்த மனம்
உன் நேசத்தை அறிந்தபின்
துவண்டு போகிறது.

arumaiyana varigal nesathai full ah theriju kita atha nama kutty manasu thangama thuvandu pogumda

சிலவார்த்தைகளை மட்டுமே
உதிர்க்கிறாய்...
உதிர்த்த வார்த்தைக்கு ஓராயிரம்
அர்த்தங்களை புரிந்து
மனம் குழப்பத்தில்...

sila varthai artham puriyamal iruthu vital evlo nala irukum chlm

தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருகிறாய்
என் இதயத்தின் துடிப்பாய்
நினைவுகளாய் அருகில் இருந்து
அழவைக்கிறாய்
கண்ணுக்குள்  கண்ணீராய்... 

unmaiyana varikal chlm  really super:-*:-*:-*



Title: Re: புரியாமல் நாடகம் ஏன்??
Post by: ஸ்ருதி on February 29, 2012, 09:23:03 PM
unmaiyana nesathirkku
parisu Kaneer than darchu
athu tharum thanimai ellam naragamanathu

yarukum vara kodathu :)
Title: Re: புரியாமல் நாடகம் ஏன்??
Post by: Dharshini on February 29, 2012, 09:28:37 PM
unmaiyana nesathirkku
parisu Kaneer than darchu
athu tharum thanimai ellam naragamanathu

aama chlm unmai than but intha kaneer kuda aanantha kaneeraga marum neram varum chlm
naragam kuda sorgam agum avanai ninaikum pothu illaya
Title: Re: புரியாமல் நாடகம் ஏன்??
Post by: ஸ்ருதி on February 29, 2012, 09:37:33 PM
நிஜம் தான்  ;) ;) ;)